சினிமா / TV

இவருக்கு இதே வேலையா போச்சு- மோடியை பற்றி பேசிய இளையராஜாவை ரவுண்டு கட்டும் நெட்டிசன்கள்…

நியமன எம் பி இளையாராஜா

இசைஞானி என்று தமிழக மக்களால் போற்றப்படும் இளையராஜா, தற்போது நியமன எம் பி ஆகவும் இருக்கிறார். சமீப காலமாகவே இளையராஜா தனது பேச்சுக்களின் மூலம் சர்ச்சையில் சிக்கிக்கொண்டே வருகிறார். பலரும் இளையராஜாவை “ஆணவம் பிடித்தவர்” என விமர்சித்து வருகின்றனர். 

சமீபத்தில் கூட “குட் பேட் அக்லி” திரைப்படத்தில் தனது பாடல்களை அனுமதி இன்றி பயன்படுத்தியதாக ரூ.5 கோடி நஷ்டஈடு கேட்டிருந்தார். இந்த விவகாரத்தில் இளையராஜா “பணத்தாசை பிடித்தவர்” என்று பலரும் கடுமையாக விமர்சித்து வந்தனர். எனினும் இது அவரது உரிமை என்று அவரை பலரும் ஆதரித்தும் வருகின்றனர். 

இந்த நிலையில் தற்போது பிரதமர் மோடி குறித்து இளையராஜா ஒரு பேட்டியில் பேசியது இணையத்தில் வைரல் ஆகி வரும் நிலையில் தமிழகத்தில் பலரும் அவரை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். 

மோடிதான் பெஸ்ட்…

“மௌண்ட் பேட்டன் காலகட்டத்தில் இருந்து இந்தியாவை ஆண்ட ஒவ்வொரு பிரதமரையும் எடுத்துப்பாருங்கள். அவர்கள் இந்தியாவிற்காக என்னென்ன செய்திருக்கிறார்கள் என்று பட்டியலிட்டு பாருங்கள். ஒரு பக்கம் மோடி இந்தியாவுக்குச் செய்த நன்மைகளையும் பட்டியலிடுங்கள். இரண்டையும் ஒப்பிட்டாலே யார் சிறந்தவர் என்பது தெரியும். 

காசி விஸ்வநாதர் ஆலயத்தை மறுசீரமைப்பு செய்தவர் யார்? 1988 ஆம் ஆண்டு நான் காசிக்குச் சென்றிருக்கிறேன். அப்போது அது வெறும் சிறுநீர் ஓடும் இடமாகத்தான் இருந்தது. அப்படித்தான் காசி விஸ்வநாதன் ஆலயமும் இருந்தது. இந்த மாற்றத்தை யார் செய்தது? 

கங்கை புனிதமானது என பல ஆண்டுகளாக கூறி வருகிறோம். அதில் மக்கள் பலரும் அறுவெறுப்பான செயல்களை செய்து வந்தனர். மோடிதான் அதனை சரியான திட்டத்துடன் தூய்மைப்படுத்திக்கொண்டு வருகிறார். தேசத்தை காதலிக்காமல் இதனை உங்களால் செய்ய முடியாது. ஒரு வேளை மோடி இந்த தேசத்தை ஆட்சி செய்யக்கூடாது என்று நீங்கள் நீனைக்கிறீர்கள் என்று வைத்துக்கொண்டால் நீங்கள் வேறு எந்த தலைவரையாவது காட்டுங்கள். யாராவது இருக்கிறார்களா? இல்லை. இதுதான் எனது பணிவான கருத்து” என்று கூறினார். 

மேலும் அப்பேட்டியில் பேசிய இளையாராஜா, “மோடியை நான் ஒருமுறை சந்தித்தபோது அவரிடம் கூறினேன், நீங்கள் இன்னும் 20 வருடங்கள் இந்த நாட்டை ஆள்வீர்கள் என்று. அது இப்போது நடந்துகொண்டிருக்கிறது” எனவும் கூறினார். 

இவ்வாறு இளையராஜா மோடியை குறித்து பேசியது தமிழக மக்களால் விமர்சனத்திற்குள்ளாக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக இவரை ஆதரித்து வந்த இவரின் ரசிகர்கள் தற்போது எந்த கருத்தையும் கூற முடியாத நிலையில் ஸ்தம்பித்து இருக்கின்றனர். 

Arun Prasad

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

2 weeks ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.