பிக் பாஸ் நிகழ்ச்சி தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என பல்வேறு மொழிகளில் ஒளிபரப்பாகி வருகிறது. ரசிகர்கள் சிலர் பர்சனலாக எடுத்துக்கொண்டு தவறான முறையில் ஈடுபட்டு வருகிறார்கள். சில சமயங்களில் சமூக வலைதளங்களில் இது போன்ற விஷயங்கள் நடப்பது தற்போது வாடிக்கையாக மாறிவிட்டது.
அந்த வகையில், ஒரு போட்டியாளருக்கு ரசிகர்களால் அதிர்ச்சி அளிக்கும் வகையில் சம்பவம் ஒன்று நடந்துள்ளது. பிக் பாஸ் தெலுங்கு பைனல் போட்டி நேற்று நடந்து முடிந்தது. இதில், பல்லவி பிரசாந்த் என்பவர் தான் டைட்டிலை வென்றார்.
அமிர்தீப் மற்றும் பல்லவி பிரசாந்த் இருவருக்கும் இடையே, தான் கடும் போட்டி நிலவியது. இதில், மக்களிடம் இருந்து அதிக வாக்குகளை பெற்ற பல்லவி பிரசாத் டைட்டில் வின்னராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்தநிலையில், வெற்றி பெற்ற பல்லவி பிரசாந்தின் ரசிகர்கள் பலரும் கூட்டமாக வந்து அமிர்தீப் காரை தாக்கியுள்ளனர்.
அவர் சென்று கொண்டிருந்த காரை சுற்றி சூழ்ந்த ரசிகர்கள் பலரும் காரின் கண்ணாடிகளை அடித்து உடைத்துள்ளனர். ஒரு விளையாட்டு நிகழ்ச்சியில் இப்படிப்பட்ட விளைவை ஏற்படுத்தியுள்ளது என்பதற்கு இதுவே மிகப்பெரிய உதாரணம். இந்த வீடியோ தற்போது இணையதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.