World Tour-அ கொஞ்சம் தள்ளிப்போடக் கூடாதா..? அஜித்தின் செயலால் ரசிகர்கள் வேதனை..!!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் நடிகர் அஜித். கடந்த சில படங்களான விஸ்வாசம், நேர்கொண்ட பார்வை, வலிமை உள்ளிட்ட படங்கள் அவரை அடுத்த கட்டத்திற்கு கூடி சென்றது. கடைசியாக துணிவு படம் வெற்றி கொடுத்தது.

திரைத்துறையில் நடிகர் அஜித்திற்கு போட்டியாளராக பார்க்கப்படுபவர் நடிகர் விஜய். இவரும் அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். 2016ல் ஒரே நாளில் அஜித்தின் வீரம் படமும், விஜய்யின் ஜில்லா படமும் வெளியானது. இந்த இரண்டு படங்களும் பாக்ஸ் ஆபீஸில் அசத்தியது. 

இதைத்தொடர்ந்து, 7 ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஆண்டுதான் அஜித்தின் துணிவு படமும், விஜய்யின் வாரிசு படமும் ஒரே நாளில் வெளியாகி ரசிகர்களை குதூகலப்படுத்தியது கதை மற்றும் வசூல் ரீதியாக துணிவு படமே முன்னிலை பெற்றது.

இதைத் தொடர்ந்து, நடிகர் விஜய் தற்போது லியோ படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். அவ்வப்போது வெளியாகும் லியோ அப்டேட்டை பார்த்து அவரது ரசிகர்கள் பூரித்து போய் வருகின்றனர்.

ஆனால், நடிகர் அஜித்குமாரோ, சுற்றுலா செல்வதிலே முழு கவனம் செலுத்தி வருவதாகக் கூறப்படுகிறது. இதனால், ஏகே 62 படத்தை கூட அவரசவரசமாக முடிக்க சொல்லி இயக்குனரை டார்ச்சர் செய்து வருவதாக சொல்லப்படுகிறது. இது அவரது ரசிகர்களிடையே சற்று வேதனையை ஏற்படுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது.

போட்டியாளரான விஜய் முழுநேரம் படத்தில் கவனம் செலுத்தி நடித்து வரும் நிலையில், நம்ம AK இப்படி வேர்ல்டு டூரில் கவனம் செலுத்தி வருகிறாரே..? என்று ரசிகர்கள் நொந்து போய் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனிடையே, அடிக்கடி விமான நிலையத்தில் நடிகர் அஜித் வந்து செல்லும் வீடியோ காட்சிகளும், புகைப்படங்களும் தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது.

Ramya Shree

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

2 weeks ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.