சினிமா / TV

பேரனோட படிப்பு போச்சு.. தனுஷை மேடையில் கிழித்தெடுத்த தந்தை கஸ்தூரி ராஜா!

தனுஷ் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக மட்டுமல்லாமல், பாடலாசிரியர், பாடகர், இயக்குநர் என பன்முகத் திறமையை வளர்த்துள்ளார். இவர் முதன்முதலில் எடுத்த பவர் பாண்டி திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.

இதனால் இயக்குநர் அந்தஸ்தை சீக்கிரமாகவே எட்டிவிட்டார். தொடர்ந்து இவர் இயக்கிய ராயன் படம் வன்முறையே அதிகமாக இருந்ததாக விமர்சனம் எழுந்தது. படம் கலவையான விமர்சனங்களையே பெற்றதால் தனுஷ் நல்ல படம் உருவாக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டார்.

இதையும் படியுங்க : 4வது மனைவியுடன் சென்று முன்னாள் மனைவிகள் மீது புகாரளித்த அஜித் பட நடிகர்.. என்ன நடந்தது?

இதையடுத்து அவர் எடுத்த படம் தான் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம். இளம் பட்டாளங்களை வைத்து இந்த படத்தை உருவாக்கினார். படத்தில் உருவான கோல்டன் ஸ்பேரோ பாடல் பட்டி தொட்டி எங்கும் ஹிட் அடித்து படத்திற்கு எதிர்பார்ப்பு எழுந்தது.

இந்த படத்தல் தனுஷின் சகோதரி மகன் பவிஷ் நாரயன் ஹீரோவாக களமிறங்கினார். மலையாள இளம் நடிகர்களான மேத்யூ தாமஸ், அனிகா, பிரியா வாரியர் உட்பட பலர் நடித்திருந்தனர்.

ஆனால் படம் வெளியாகி படுதோல்வியை சந்தித்தது. படத்தின் கதை நன்றாக இருந்தாலும், திரைக்கதை சொதப்பியது. 15 கோடியில் உருவாக்கப்பட்ட இந்த படம், 10 கோடி ரூபாய் வசூலை கூட தாண்டவில்லை.

அதுமட்டுமல்லாமல், இந்த படத்துடன் வெளியான டிராகன் படம் 100 கோடி ரூபாய் வசூலை தாண்டியது. ஒருவேளை டிராகனுடன் ரிலீஸ் ஆகாமல் இருந்திருந்தால் நிலவுக்கு என் மீது என்னடி கோபம் படத்திற்கு நல்ல ரெஸ்பான்ஸ் கிடைத்திருக்கும் என பேச்சும் அடிபடுகிறது.

இந்த நிலையில் படவிழா ஒன்றில் பங்கேற்ற தனுஷ் தந்தை கஸ்தூரி ராஜா, என் பேரன் பவிஷ் கதாநாயகனாக நடித்துள்ளார். அவன் 12ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கிறான். நன்றாக படிக்கக்கூடிய பையன், அவனுடைய படிப்பை நிறுத்திவிட்டு தனுஷ், நடிக்க அழைத்து சென்றுவிட்டார் என கூறினார்.

கஸ்தூரி ராஜாவின் இந்த பேச்சு ரசிகர்களை முணுமுணுக்கவைத்துள்ளது. படிப்பை நிறுத்திவிட்டு நடிக்க அழைத்து சென்ற தனுஷ்க்கு எதிர்ப்பு கிளம்பி வருகிறது.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

1 week ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.