சினிமா / TV

இதெல்லாம் அதர பழசான கதை- கூலி படத்தை தொங்கவிட்டு வெளுத்த பிரபல விமர்சகர்…

அரங்கம் அதிர வெளியான கூலி?

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள “கூலி” திரைப்படம் இன்று வெளியாகியுள்ள நிலையில் ரசிகர்கள் பலரும் திரையரங்கை நோக்கி படையெடுத்து வருகின்றனர். படம் பார்த்த பலரும் ரஜினிகாந்தின் நடிப்பு அசத்தலாக இருப்பதாக கருத்து தெரிவித்து வருகின்றனர். எனினும் மொத்தமாக கொஞ்சம் கலவையான விமர்சனங்களே வெளி வருகின்றன. அந்த வகையில் பிரபல விமர்சகரான Filmi craft அருண் இத்திரைப்படத்தை விமர்சித்து வீடியோ வெளியிட்டுள்ளார். 

இதெல்லாம் அதர பழசான கதை?

“கூலி படத்தில் அப்படி என்னதான் பிரச்சனை என கேட்டீர்களானால், முதலில் இந்த படத்தின் கதையே பிரச்சனைதான். இந்த படமெல்லாம் ரஜினிகாந்தின் பில்லா, ரங்கா போன்ற திரைப்படங்கள் வெளிவந்த காலகட்டத்திலேயே வந்திருக்க வேண்டிய படம். அவ்வளவு ஒரு அரத பழசான கதை. 

கதைக்களமாக பார்த்தால் இது ஒரு வழக்கமான சென்டிமன்ட் கலந்த ஆக்சன் படம்தான். இதெல்லாம் ஒரு 30 வருடங்களுக்கு முன்பே வர வேண்டிய படம். 

கிளைமேக்ஸை தவிர படத்தில் சுவாரஸ்யமாகவோ பரபரப்பாகவோ திரைக்கதையில் எந்த நகர்வும் இல்லை. 

இதற்கு முக்கியமான காரணம் இந்த படத்திற்கு இவர்கள் செய்த Production Value. இருக்கின்ற மொத்த பணத்தையும் சம்பளமாக பிரித்து கொடுத்துவிட்டீர்கள் என்றால் படம் எடுப்பதற்கு எங்கே காசு இருக்கும்? ஹார்பருக்குள் இரண்டு காட்சிகள், வீட்டுக்குள் இரண்டு காட்சிகள், பின்னி மில்ஸ் மாதிரியான ஒரு செட்டை போட்டு அதற்குள் இரண்டு காட்சிகள் என மிகவும் சிம்பிளாக படத்தை எடுத்துவிட்டார்கள். இவர்கள் என்ன செலவே செய்யவில்லை போல என்று தோன்ற வைக்கிறது” என தனது விமர்சனத்தில் தெரிவித்துள்ளார். இவரது விமர்சனம் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. 

Arun Prasad

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

1 week ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

1 week ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

1 week ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

1 week ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

1 week ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.