சினிமா / TV

அஜித் பட நடிகர் மீது முதல் மனைவி பரபரப்பு புகார்.. 3வது மனைவியுடனும் சிக்கலா?

வீரம் பட நடிகர் பாலா மீது அவரது முதல் மனைவி கொச்சி போலீசில் புகாரளித்துள்ளார். ஆனால், இது பற்றி தனக்குத் தெரியாது என பாலா கூறியுள்ளார்.

திருவனந்தபுரம்: தமிழில் வெளியான அன்பு, காதல் கிசுகிசு, அம்மா அப்பா செல்லம், வீரம் மற்றும் தம்பி உள்பட பல தமிழ், மலையாளப் படங்களில் நடித்தவர் நடிகர் பாலா. இவர் பிரபல இயக்குநர் சிறுத்தை சிவாவின் தம்பி ஆவார். இந்த நிலையில், இவர் கடந்த 2010ஆம் ஆண்டு பிரபல மலையாளப் பாடகி அமிர்தா சுரேஷை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். ஆனால், இவர்களுக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டைத் தொடர்ந்து, அமிர்தா சுரேஷை பாலா விவாகரத்து செய்தார். இதன் பின்னர், எலிசபெத் என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்தார். ஆனால், இந்த திருமண வாழ்வும் நீண்ட காலம் நீடிக்கவில்லை.

எனவே, எலிசபெத்தையும் பாலா விவாகரத்து செய்தார். இதனைத் தொடர்ந்து, கடந்த வருடம் தன்னுடைய மாமன் மகளை மூன்றாவதாக திருமணம் செய்துகொண்டு வாழ்ந்து வருகிறார். இந்த நிலையில், முதல் மனைவியான அமிர்தா சுரேஷ், நடிகர் பாலா மீது கொச்சி போலீசில் புகார் ஒன்றை அளித்துள்ளார்.

அந்தப் புகாரில், “எனது கணவராக இருந்த பாலா உடனான விவாகரத்து வழக்கில், இருவருக்கும் இடையே ஒரு ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது. அதன் 5வது பக்கத்தை அவர் போலியாகத் தயாரித்துள்ளார். அதாவது, மகளின் பெயரில் எடுக்கப்பட்ட இன்சூரன்சில் அவர் முறைகேடு செய்துள்ளார்.

இதையும் படிங்க: கமல் ஆணவப் பேச்சு…தக் லைப் கொடுத்த செல்வராகவன்..!

குறிப்பாக, பிரீமியம் தொகையை அவர் கட்டவில்லை. இன்சூரன்ஸுக்கான தொகையைத் திரும்ப எடுத்துக் கொண்டார். வங்கியில் மகளின் பெயரில் டெபாசிட் செய்த 15 லட்சம் ரூபாயையும் அவர் திரும்பப் பெற்றுக் கொண்டார். மேலும், போலி ஆவணங்களைத் தாக்கல் செய்து நீதிமன்றத்தையும் ஏமாற்றியுள்ளார்.

எனவே, பாலா மீது வழக்குப் பதிவு செய்து தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் புகாரின் பேரில், நடிகர் பாலா மீது கொச்சி போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். அதேநேரம், இந்த வழக்கு குறித்து தனக்கு எதுவும் தெரியாது என பாலா கூறியுள்ளார். இதனால், மூன்றாவது மனைவிக்கு சிக்கல் எழுந்துள்ளது.

Hariharasudhan R

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

2 weeks ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.