சன்னி லியோன் பெயரில் சத்தீஸ்கர் மாநிலத்தில் திருமணமான பெண்கள் மாதந்தோறும் பெறும் ஆயிரம் ரூபாயைப் பெற்று வந்த நபரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
ராய்ப்பூர்: பிரபல நடிகை சன்னி லியோன், முதலில் ஆபாசப் படங்களில் நடித்து பிரபலமானவர். இதனையடுத்து, குழந்தைகளைத் தத்தெடுத்து வளர்க்கத் தொடங்கிய இவர், திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வருகிறார். அதேநேரம், சில திரைப்படங்களிலும் அவ்வப்போது சன்னி லியோன் நடித்து வருகிறார்.
இந்த நிலையில், சத்தீஸ்கர் மாநிலம், பாஸ்டர் மாகாணத்துக்கு உட்பட்ட தாலூர் எனும் கிராமத்தைச் சேர்ந்த விரேந்திர ஜோஷி என்பவர், சன்னி லியோன் பெயரைப் பயன்படுத்து, அரசின் மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் பயனைப் பெற்று வருவது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.
சத்தீஸ்கரில் ஆளும் பாஜக அரசு சார்பில் மஹாதரி வந்தான் யோஜனா (Mahtari Vandan Yojana) எனும் திட்டத்தின் கீழ் திருமணமான பெண்களுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தான், இந்த திட்டத்தில் சன்னி லியோன் பெயரில் மோசடி நடந்திருப்பது தெரிய வந்து உள்ளது.
இதனையடுத்து, மாவட்ட ஆட்சியர் ஹரீஸ் எஸ், மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறையினர், இது குறித்து தீவிர விசாரணை நடத்த உத்தரவிட்டு உள்ளார். அது மட்டுமல்லாமல், சன்னி லியோன் பெயரில் பெறப்பட்டு வந்த பயனை மாவட்ட ஆட்சியர் உடனடியாக ரத்து செய்து உத்தரவிட்டு உள்ளார்.
இதையும் படிங்க: சல்மான் கான் போட்ட திடீர் கண்டிஷன்..ஏ.ஆர்.முருகதாஸுக்கு வந்த சிக்கல்..அப்போ SK-23..?
இதனிடையே, பாஜக அரசின் மஹாதரி வந்தான் யோஜனா திட்டத்தில் உள்ள 50 சதவீத பயனாளிகள் பொய்யாக உள்ளதாக அம்மாநில காங்கிரஸ் தலைவர் தீபக் பாஜி விமர்சித்து உள்ளார். இதற்கு, இதுபோன்ற திட்டங்களை கடந்த கால காங்கிரஸ் அரசு மக்களுக்கு அளிக்கவில்லை என மாநில துணை முதலமைச்சர் அருண் சோ கூறியுள்ளார்.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ராஜலட்சுமி…
நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…
இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…
தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…
கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…
அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…
This website uses cookies.