மதுரையில் நடந்த உண்மைச் சம்பவத்தை தழுவியே கேம் சேஞ்சர் படம் உருவாக்கப்பட்டுள்ளதாக எஸ்ஜே சூர்யா தெரிவித்துள்ளார்.
சென்னை: இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில், ராம் சரண், கியாரா அத்வானி, சமுத்திரக்கனி, எஸ் ஜே சூர்யா உள்ளிட்டோர் நடித்துள்ள கேம் சேஞ்சர் திரைப்படம், இன்று உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. முன்னதாக, இப்படத்தின் தமிழ்நாட்டு வெளியீடு உரிமைதாரராக ராக் போர்ட் நிறுவனம் உள்ளது.
இந்த நிலையில், இந்த நிறுவனம் வெளியிட்டுள்ள புரோமோஷன் வீடியோவில், நடிகர் எஸ்ஜே சூர்யா பேசியுள்ளார். அதில் பேசிய அவர், “இதுவரை என்னுடைய படங்களுக்கு பெரும் வரவேற்பைக் கொடுத்துள்ளீர்கள். தற்போது ஷங்கர் சாரின் இயக்கத்தில் கேம் சேஞ்சர் படத்தில் ராம் சரண், கைரா அத்வானி, அஞ்சலி, ஜெயராம் உள்ளிட்டோருடன் நடித்துள்ளேன்.
பெரும் பொருட்செலவில் தில் ராஜு தயாரித்திருக்கிறார். எனது முந்தைய படங்களுக்கு கொடுத்த ஆதரவைப் போன்று இதற்கும் கொடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். இதன் கதையினை கார்த்திக் சுப்புராஜ், மதுரையில் உள்ள ஒரு கலெக்டரின் வாழ்க்கையில் இருந்து எடுத்து, ஆந்திராவில் நடக்கும் கதையாக எழுதியிருக்கிறார்.
ஷங்கருக்கு ஏற்றதொரு கதை என்பதால், பிரமாண்டமாக செய்திருக்கின்றனர். திருவின் ஒளிப்பதிவு, பிரபுதேவா, ஜானி ஆகிய மாஸ்டர்களின் நடனம், தமனின் இசை என அனைத்துமே நன்றாக வந்துள்ளது. தமிழ், இந்தி என அனைத்து மொழிகளிலும் வெளியாகிறது.
இதையும் படிங்க: 7 நாளும் வேலை பார்க்கனுமா? கொதித்தெழுந்த தீபிகா படுகோன்!
எனக்கு ரொம்ப கதை பிடித்துப் போய் சிறப்பான முறையில் செய்துள்ளேன். உங்கள் அனைவருக்கும் இந்தப் படம் பிடிக்கும். மதுரையில் ஒரு கலெக்டருக்கும், அரசியல்வாதிக்கும் நடந்த உண்மைச் சம்பவம் தான் இந்தக் கதை. நல்ல கருத்துள்ள பிரமாண்ட படமாக வந்திருக்கிறது” எனத் தெரிவித்துள்ளார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.