சில்க் ஷூட்டிங் இல்லாத நேரங்களில் இங்க தான் இருப்பார்: ரகசியத்தை வெளியிட்ட கங்கையமரன்..!

1980களில் தமிழ் சினிமாவில் கவர்ச்சி நடிகையாக வலம் வந்து இளைஞர்களின் மத்தியில் கனவுக்கன்னியாக இன்றும் வாழ்ந்து வருபவர் நடிகை சில்க் ஸ்மிதா.

படத்துக்காகத்தான் கவர்ச்சியை காட்டி அதிக சொத்துக்களை சேர்த்தாலும், இல்லாதவர்களுக்கு தன்னால் முடிந்த உதவிகளை செய்பவர். திடிரென தற்கொலை செய்த அவரின் மரணம் இன்றும் அவிழ்க்கப்படாத மர்ம முடிச்சுகளாகவே உள்ளன.

இதனிடையே, இசையமைப்பாளர் கங்கை அமரன் ஒரு பேட்டியில் சில்க் ஸ்மிதாவை பற்றி சில தகவலை வெளியிட்டுள்ளார். அதில் அவர் பேசுகையில், தானும், சில்க் ஸ்மிதாவும் நெருங்கிய நண்பர்கள் என்றும், ஷூட்டிங் இல்லாத நேரங்களில் தனக்கு சில்க் போன் செய்து வீட்டிற்கு வரட்டுமா என்று கேட்பார் என தெரிவித்துள்ளார்.

மேலும், இதுகுறித்து அவர் கூறுகையில், வீட்டிற்கு வந்து தன் மனைவியோடு சமையல் செய்து, சாப்பிட்டு மகிழ்ச்சியாக இருப்பார் எனவும், அப்போது பிரேம்ஜி மிகவும் சின்ன பையனாக இருப்பான் தன் மகனைப் பார்த்து இவனை நான் கல்யாணம் பண்ணிகிட்டுமா? என்று கேட்பார் எனவும், தானும் ஓ…கே.. என்று தலையாட்டி சிரிப்பேன் எனவும், அந்த நாட்களை தன்னால் மறக்கவே முடியாது என தெரிவித்துள்ளார்.

தன்னை எங்கு பார்த்தாலும் சில்க், ஓடி வந்து கட்டி பிடித்துக் கொள்வார் எனவும், தன்னை மச்சான் என்று தான் சில்க் அழைப்பார் என தெரிவித்துள்ளார்.

அந்த அளவுக்கு தன்னும் தன் குடும்பத்துடனும், சில்க் நெருங்கி பழகினார் என்றும், சில்க்கை பார்க்கும்போது ஒரு கிராமத்திலிருந்து வந்தவர் போல் தெரியாது எனவும்,
இன்று வரை அவரை போல் ஆடையிலும் சரி, முக அலங்காரத்திலும் சரி யாராலும் ரசித்து ரசித்து தன்னை மெருகேற்ற முடியாது என தெரிவித்துள்ளார்.

சில்க் அந்த அளவுக்கு தன்னை தானே மெதுவாக செதுக்கி செதுக்கி சினிமாவிற்காகவே படைக்கப்பட்டவள் போல் மாறினார் எனவும், சில்க் இறந்த போது, தன்னால் ஜீரணிக்க முடியவில்லை எனவும், ஒரு வார காலம் காய்ச்சலில் படுத்துவிட்டேன் என வருத்தத்துடன் பகிர்ந்து கொண்டார்.

Poorni

Recent Posts

அறிவிப்பு வெளிவருவதற்கு முன்பே ஓடிடியில் விற்பனையான ராஜமௌலி திரைப்படம்? என்னப்பா சொல்றீங்க!

ராஜமௌலி-மகேஷ் பாபு கூட்டணி இந்திய சினிமாவின் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் எஸ் எஸ் ராஜமௌலி. தெலுங்கில் பல திரைப்படங்களை…

8 hours ago

வாடகைக்கு ஆள் பிடித்து திமுக புகழை பாடச் சொன்னால் மட்டும் போதுமா? அண்ணாமலை குற்றச்சாட்டு!

வாடகைக்கு ஆட்களைப் பிடித்து, திமுக புகழ் பாடச் சொன்னால் மட்டும் போதாது செயலிலும் இருக்க வேண்டும் என திமுக அரசை…

8 hours ago

வெற்றிமாறன் கையில் எடுக்கும் புது முயற்சி? இதான் ஃபர்ஸ்ட் டைம்! இது ரொம்ப புதுசா இருக்கே?

வெற்றிமாறன்-சிம்பு கூட்டணி வெற்றிமாறன்-சிம்பு கூட்டணியில் உருவாகவுள்ள திரைப்படத்தின் ஆரம்ப கட்ட பணிகள் தொடங்கப்பட உள்ளதாக செய்திகள் வெளிவருகின்றன. தனுஷ் தனது…

9 hours ago

Welcome to Malayalam Cinema; சாய் அப்யங்கரை வாழ்த்தி வரவேற்ற லாலேட்டன்! தரமான சம்பவம்?

டிரெண்டிங் இசையமைப்பாளர் தமிழ் சினிமா உலகில் தற்போது டிரெண்டிங் இசையமைப்பாளராக வலம் வருபவர் சாய் அப்யங்கர். “கட்சி சேர” என்ற…

10 hours ago

அஜித் மரண வழக்கை சிபிஐக்கு மாற்றியுள்ளார் முதல்வர்.. இது அவருடைய பெருந்தன்மை : காங்., தலைவர் பேச்சு!

மடப்புரத்தில் உயிரிழந்த அஜித்குமாரின் குடும்பத்திற்கு ஆறுதல் கூற வந்த தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் செல்வப் பெருந்தகை செய்தியாளர்களை சந்தித்த…

11 hours ago

பாபநாசம் படத்தில் ரஜினிகாந்த்? இயக்குனர் எடுத்த முடிவால் ஹீரோவே மாறிய சம்பவம்!

திரிஷ்யம் படத்தின் ரீமேக் 2013 ஆம் ஆண்டு ஜீத்து ஜோசஃப் இயக்கத்தில் மலையாளத்தில் மோகன் லால் நடிப்பில் வெளியான திரைப்படம்…

11 hours ago

This website uses cookies.