சினிமா / TV

பாட்டு பாடி பாரதிராஜாவை ஆற்றுப்படுத்திய கங்கை அமரன்… மனதை நெகிழ வைத்த வீடியோ…

மகனை இழந்த இமயம்…

இயக்குனர் இமயம் பாரதிராஜாவின் மகனான மனோஜ் பாரதிராஜா கடந்த மார்ச் மாதம் 25 ஆம் தேதி உடல் நலக்குறைவால் காலமானார். அவரது இறப்பு செய்தி திரைத்துறையினர் மட்டுமல்லாது தமிழ் சினிமா ரசிகர்கள் பலரையும் அதிர்ச்சியிலும் சோகத்திலும் ஆழ்த்தியது. 

மகனை இழப்பது என்பது தந்தைக்கு மிகப்பெரிய வலி, இறைவன் பாரதிராஜாவிற்கு மன அமைதியையும் தைரியத்தையும் கொடுக்கட்டும் என்று ரசிகர்கள் பலரும் மனோஜ் பாரதிராஜாவுக்கு தங்களது இரங்கலை தெரிவித்தனர். 

ஆற்றுபடுத்திய கங்கை அமரன்

கங்கை அமரனும் பாரதிராஜாவும் இளம் வயதில் இருந்தே நெருங்கிய நண்பர்களாக திகழ்ந்து வந்தவர்கள். இளையராஜா, கங்கை அமரன், பாரதிராஜா ஆகிய மூவரும் தங்களது இளமை காலத்தில் தேனீயில் இருந்தபோதே மிகவும் நெருங்கிய நண்பர்களாக பழகி வந்தவர்கள். கிட்டத்தட்ட மூவரும் ஒரே சமயத்தில் சென்னைக்கு வந்தார்கள். 

இந்த நிலையில் கங்கை அமரன், தனது நண்பரான பாரதிராஜாவை பாட்டு பாடி ஆற்றுப்படுத்திய வீடியோ ஒன்று இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. இந்த வீடியோவில் பாரதிராஜா நடித்த “கல்லுக்குள் ஈரம்” திரைப்படத்தில் இடம்பெற்ற சிறு பொன்மணி அசையும் என்ற பிரபலமான பாடலை பாடி பாரதிராஜாவை பழைய நினைவுகளுக்குள் கொண்டு சென்றார் கங்கை அமரன். 

பாடலை பாடி முடித்த பிறகு, அந்த பாடல் எழுதப்பட்ட சம்பவத்தையும் நினைவுகூர்ந்தார் கங்கை அமரன். இவற்றை எல்லாம் மிகவும் அமைதியாக கேட்டுக்கொண்டிருந்தார் பாரதிராஜா. இந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆக, ரசிகர்கள் பலரும் நெகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். இளையராஜாவின் இசையில் இப்பாடலை எழுதியவர் கங்கை அமரன் என்பது குறிப்பிடத்தக்கது. 

Arun Prasad

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

1 week ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

1 week ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

1 week ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

1 week ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

1 week ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.