சினிமா / TV

குட் பேட் அக்லிக்கு மூடு விழா நடத்திய கேங்கர்ஸ்? கடைசில இப்படி ஆகிடுச்சே!

களைகட்டும் கேங்கர்ஸ்

சுந்தர் சியும் வடிவேலுவும் இணைந்து கலக்கிய “கேங்கர்ஸ்” திரைப்படம் நேற்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது. கிட்டத்தட்ட 15 வருடங்கள் கழித்து சுந்தர் சி-வடிவேலு காம்போ  இணைந்துள்ளதால் இத்திரைப்படத்திற்கு அதிகளவு எதிர்பார்ப்பு இருந்தது. அந்த வகையில் ரசிகர்களின் எதிர்பார்ப்பை இத்திரைப்படம் பூர்த்தி செய்துள்ளது என்றுதான் கூற வேண்டும். 

வடிவேலுவின் காமெடி காட்சிகள் வயிறு குலுங்க சிரிக்க வைப்பதாக படம் பார்த்தவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இத்திரைப்படம் நிச்சயம் வடிவேலுவுக்கு கம்பேக் தான் என விமர்சகர்கள் பலரும் பாராட்டி வருகின்றனர். 

குட் பேட் அக்லி டோட்டல் குளோஸ்!

இந்த நிலையில் அஜித் திரைப்படமான “குட் பேட் அக்லி” திரைப்படத்தின் வசூலை கொஞ்சம் கொஞ்சமாக ஓரங்கட்டி வருகிறது “கேங்கர்ஸ்”. “குட் பேட் அக்லி” திரைப்படம் இப்போது வரை உலகமெங்கும் ரூ.220 கோடிகள் வசூல் ஆகியுள்ளது. 

இந்த நிலையில் சுந்தர் சியின் “கேங்கர்ஸ்” திரைப்படம் நேற்று முதல் நாளிலேயே தமிழ்நாட்டில் மட்டும் ரூ.1 கோடியே 16 லட்சம் வசூல் ஆகியுள்ளதாம். ஆனால் நேற்று தமிழ்நாட்டில் “குட் பேட் அக்லி” திரைப்படத்தின் வசூல் ஒரு கோடிதான் என ஒரு தகவல் வெளிவருகிறது. இதனை வைத்து பார்க்கும்போது “குட் பேட் அக்லி” திரைப்படத்தை “கேங்கர்ஸ்” திரைப்படம் ஓரங்கட்டியுள்ளது என்று பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Arun Prasad

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

2 weeks ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.