தமிழ் சினிமாவின் நவரச நாயகன் ஆண்களே காதல் கொள்ளும் ஆணழகன் என்றெல்லாம் புகழப்பட்டவர் தான் நடிகர் கார்த்திக். இவர் 1988ம் ஆண்டு ராகினி என்பவரை திருமணம் செய்துக்கொண்டார். இவர்களுக்கு பிறந்த பிள்ளைகள் தான் கெளதம் கார்த்திக், கைன் கார்த்திக். அழகாக சென்று கொண்டிருந்த வாழ்க்கையை சிதைத்துக்கொண்டார் கார்த்திக்.
ஆம், மனைவி ராகினி உடனான வாழ்க்கையை 4 வருடத்தில் முடிவுக்கு கொண்டுவந்துவிட்டார். அதன் பின்னர் ரதி என்பவரை 1992ம் ஆண்டு மறுமணம் செய்துக்கொண்டார். அவர்களுக்கு திரன் என்ற ஒரு மகன் பிறந்தான். இந்நிலையில் கெளதம் கார்த்திக் தன்னுடைய அப்பாவால் சிறுவயதில் தான் பட்ட கஷ்டங்கள் குறித்து பேட்டி ஒன்றில் மனம் திறந்து பேசியுள்ளார்.
அதாவது என்னுடைய அப்பா திடீரென என் அம்மாவை விட்டெறிந்து வேறொருவரை திருமணம் செய்துக்கொண்டார். அந்த வலியை என் அம்மாவால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை அதனால் என் அப்பாவை விட்டு பிரிந்து என்னையும் என் தம்பியையும் அழைத்துக்கொண்டு மும்பையில் வைத்து வளர்த்து படிக்க வைத்து ஆளாக்கினார்.
சிங்கிள் மதராக அம்மா எங்களை வளர்க்க மிகவும் கஷ்டப்பட்டார். பல பிரச்சனைகள் வந்தாலும் அதையும் மீறி தைரியமாக எல்லாத்தையும் எதிர்கொண்டார். இத்தனை வருஷத்தில் என் அப்பாவிடம் இருந்து ஒரு சில முறை தான் போன் வந்திருக்கும். எப்போவாச்சும் தான் எங்களை பார்க்க வருவார். அப்போதெல்லாம் நான் மிகவும் தனிமையில் வாடினேன் என மிகவும் வருத்தமாக பேசியுள்ளார். கெளதம் கார்த்தியின் இந்த பேட்டி அதிர்ச்சி கொடுத்ததோடு மிகவும் வருத்தமடைய செய்துள்ளது.
திமுக ஐடி வின் சார்பில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தவறாக சித்தரித்து நேற்று சமூக வலைதளங்களில் கார்ட்டூன் படம்…
திருவள்ளூர் மாவட்டம், திருவாலங்காட்டை அடுத்த களாம்பாக்கத்தைச் சேர்ந்த வாலிபர் தனுஷ் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த விஜயஸ்ரீ ஆகியோர் சமூக வலைதளம்…
பிச்சைக்காரராக தனுஷ் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலரது நடிப்பில் இன்று வெளியாகியுள்ள “குபேரா”…
திருவள்ளூர் மேற்கு மாவட்ட பாஜக சார்பில் வெங்கத்தூர் கட்சி அலுவலகத்தில்வளர்ந்த இந்தியாவின் அம்ரித் கால் சேவை நல்லாட்சி ஏழைகளின் நலன்11…
தனுஷின் குபேரா சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா, ஜிம் சர்ப் உள்ளிட்ட பலரது நடிப்பில் இன்று…
திண்டுக்கல் தாடிக்கொம்பு பகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் சார்பில் காவல்துறை அனுமதியுடன் கிளர்ச்சி பிரச்சார இயக்கம் நடைபெற்றது. இதையும் படியுங்க:…
This website uses cookies.