அந்த ஆசைக்காக அனாதையாக்கிட்டார்… மனைவியின் தங்கையுடன் இரண்டாம் திருமணம் – உண்மை கூறி அதிர வைத்த கெளதம் கார்த்திக்!

தமிழ் சினிமாவின் நவரச நாயகன் ஆண்களே காதல் கொள்ளும் ஆணழகன் என்றெல்லாம் புகழப்பட்டவர் தான் நடிகர் கார்த்திக். இவர் 1988ம் ஆண்டு ராகினி என்பவரை திருமணம் செய்துக்கொண்டார். இவர்களுக்கு பிறந்த பிள்ளைகள் தான் கெளதம் கார்த்திக், கைன் கார்த்திக். அழகாக சென்று கொண்டிருந்த வாழ்க்கையை சிதைத்துக்கொண்டார் கார்த்திக்.

ஆம், மனைவி ராகினி உடனான வாழ்க்கையை 4 வருடத்தில் முடிவுக்கு கொண்டுவந்துவிட்டார். அதன் பின்னர் ரதி என்பவரை 1992ம் ஆண்டு மறுமணம் செய்துக்கொண்டார். அவர்களுக்கு திரன் என்ற ஒரு மகன் பிறந்தான். இந்நிலையில் கெளதம் கார்த்திக் தன்னுடைய அப்பாவால் சிறுவயதில் தான் பட்ட கஷ்டங்கள் குறித்து பேட்டி ஒன்றில் மனம் திறந்து பேசியுள்ளார்.

அதாவது என்னுடைய அப்பா திடீரென என் அம்மாவை விட்டெறிந்து வேறொருவரை திருமணம் செய்துக்கொண்டார். அந்த வலியை என் அம்மாவால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை அதனால் என் அப்பாவை விட்டு பிரிந்து என்னையும் என் தம்பியையும் அழைத்துக்கொண்டு மும்பையில் வைத்து வளர்த்து படிக்க வைத்து ஆளாக்கினார்.

சிங்கிள் மதராக அம்மா எங்களை வளர்க்க மிகவும் கஷ்டப்பட்டார். பல பிரச்சனைகள் வந்தாலும் அதையும் மீறி தைரியமாக எல்லாத்தையும் எதிர்கொண்டார். இத்தனை வருஷத்தில் என் அப்பாவிடம் இருந்து ஒரு சில முறை தான் போன் வந்திருக்கும். எப்போவாச்சும் தான் எங்களை பார்க்க வருவார். அப்போதெல்லாம் நான் மிகவும் தனிமையில் வாடினேன் என மிகவும் வருத்தமாக பேசியுள்ளார். கெளதம் கார்த்தியின் இந்த பேட்டி அதிர்ச்சி கொடுத்ததோடு மிகவும் வருத்தமடைய செய்துள்ளது.

Ramya Shree

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

1 week ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.