சீயான் விக்ரம் நடிப்பில் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் உருவான “துருவ நட்சத்திரம்” திரைப்படம் கிட்டத்தட்ட 8 ஆண்டுகளுக்கு மேலாகவே திரைக்கு வராமல் கிடப்பில் கிடக்கிறது. 2013 ஆம் ஆண்டு இத்திரைப்படத்தின் அறிவிப்பு வெளிவந்தது. முதலில் சூர்யா இத்திரைப்படத்தில் நடிப்பதாக இருந்தது. ஆனால் சில காரணங்களால் சூர்யா வெளியேறினார்.
அதன் பின் இத்திரைப்படத்தில் விக்ரம் என்ட்ரி கொடுக்க 2017 ஆம் ஆண்டு இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது. ஆனால் சில பொருளாதார பிரச்சனைகள் காரணமாகவும் நடிகர்களின் கால்ஷீட் பிரச்சனை காரணமாகவும் இத்திரைப்படம் இடைவெளி விட்டு விட்டு படமாக்கப்பட்டது.
அந்த வகையில் 2023 ஆம் ஆண்டு இத்திரைப்படம் வெளியாகும் என கௌதம் மேனன் அறிவித்திருந்தார். ஆனால் இத்திரைப்படத்தின் இறுதிகட்ட பணிகளில் தொய்வு ஏற்பட்டதால் படம் முழுவதுமாக தயாராகவில்லை. அதனை தொடர்ந்து கடந்த 2024 ஆம் ஆண்டு இத்திரைப்படம் வெளியாகும் என கௌதம் மேனன் அறிவித்திருந்தார். ஆனால் அப்போதும் வெளியாகவில்லை. இவ்வாறு பல வருடங்களாக இழுபறியிலேயே இருக்கிறது இத்திரைப்படம்.
இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்துகொண்ட கௌதம் மேனன், இந்த ஆண்டு ஜூலை அல்லது ஆகஸ்து மாதத்திற்குள் “துருவ நட்சத்திரம்” திரைப்படத்தை வெளியிடுவதற்கான முயற்சிகளில் இருப்பதாக கூறியுள்ளார். இத்திரைப்படத்தை வெளியிடும் முயற்சிகளில் மட்டுமே முழு கவனம் செலுத்தப்போவதாகவும் இதற்காக வேறு எந்த திரைப்படத்திலும் தான் ஒப்பந்தமாகவில்லை எனவும் கூறியுள்ளார். இப்பேட்டி ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிறவைத்துள்ளது.
டாக்டர் அட்லீ சென்னை சத்யபாமா பல்கலைக்கழகத்தில் இயக்குனர் அட்லீக்கு இன்று கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. தமிழில் “ராஜா ராணி”,…
பிரதமர் வீடு வழங்கும் திட்டம் (PMAY), பிரதமர் மீன்வளத் திட்டம் (PMMSY), உயிர்நீர் (Jaljeevan) எனப் பிரதமரின் பெயரையும்,பிரதமரின் முகத்தையும்…
சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற முத்தமழை பாடலை பாடகி தீ பாடியிருந்தார். ஆனால் அவரால் “தக்…
கழிவறையில் ரகசிய கேமரா வைத்து பெண் போலீசை வீடியோ எடுத்து மிரட்டிய சக போலீசார் சிக்கியுள்ளார். கேரள மாநிலம் இடுக்கி…
சூர்யா 45 “ரெட்ரோ” திரைப்படத்தை தொடர்ந்து சூர்யா ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்துள்ளார். இதில்…
துரையில் நடைபெறும் முருக பக்தர்கள் மாநாடு குறித்து ஆலோசனைக் கூட்டம் திருவாரூரில் உள்ள தனியார் மண்டபத்தில் இன்று நடைபெற்றது. இதற்காக…
This website uses cookies.