“18 வயசு” படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர் தான் காயத்ரி. இந்த படத்தை தொடர்ந்து, நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், மத்தாப்பூ, ரம்மி, புரியாத புதிர் போன்ற படங்களில் நடித்து பிரபலமானார். கடந்த ஆண்டு இவர் நடிப்பில் சூப்பர் டீலஸ் திரைப்படம் வெளியானது. நடுல கொஞ்சம் பக்கத்த காணோம் படத்தின் மூலம் அறிமுகமாகி, அந்த படத்தில் வரும் பப்பப்ப்பா காட்சியில் Famous ஆனார்.
அந்த காட்சியின் மூலம் பட்டி தொட்டி எங்கும் வேற லெவலில் பிரபலமானார் காயத்ரி. விஜய் சேதுபதியோடு கிட்ட தட்ட 7,8 படங்களில் நடித்துள்ளார். அதில் 2 படங்கள் மட்டுமே ஹிட் ஆகியுள்ளது. அதன் பிறகு சில Web Series-களில் நடித்து வருகிறார். குறிப்பாக கமல் ஹாசனின் விக்ரம் படத்தில் பஹத் பாசிலுக்கு ஜோடியாக நடித்து மீண்டும் ரசிகர்கள் கவனத்தை ஈர்த்தார்.
பின்னர் சமீபத்திய பேட்டி ஒன்றில் தனது திரைப்பயணம் குறித்தும் அதன் அனுபவங்கள் குறித்தும் பகிர்ந்துக்கொண்ட காயத்ரி ஷங்கர், ” நான் படவாய்ப்புகள் இல்லாதிருந்த சமயம் அது…. அப்போது இந்தி படத்தில் நடிக்க வந்த வாய்ப்பிற்காக மும்பை சென்றிருந்தேன். அப்போது என்னிடம் பேசிய பெண் ஒருவர் இங்கு ஐட்டம் பாடலுக்கு நடனமாடும் வாய்ப்பு தான் கிடைக்கும் என்றார்.
ஆனால், அதற்கு கூட நீங்கள் தகுதியானவராக என்னக்கு தெரியவில்லை என்றார். காரணம் நீங்க ரொம்ப டஸ்கி காலரா இருக்கீங்க. இங்கு நல்ல வெள்ளையாக, மிகவும் அழகாக, கூடுதலான கவர்ச்சியோடு இருப்பவர்களுக்கு மட்டும் தான் அந்த வாய்ப்பும் கிடைக்கும் என முகத்தில் அடித்தாற்போன்று சொல்லிவிட்டார். அதன் பின்னர் நான் அங்கிருந்து வந்துவிட்டேன். பின்னர் பிரபல இயக்குனர் அனுராக் காஷ்யப்பிற்கு எனக்கு உங்கள் படத்தில் வாய்ப்பு கொடுங்கள் என கேட்டு மெயில் செய்தேன்.
அதற்கு உடனே ரிப்ளை செய்த அவர் உங்களின் முந்தைய படங்களின் காட்சிகள் சிலவற்றை அனுப்புங்கள் என கேட்டதும் நானும் அனுப்பினேன். ஆனால் அதன் பின்னர் பதில் வரவில்லை. எனவே அவ்வளவு தான் என நினைத்துக்கொண்டு நான் நம்ம ஊருக்கே திரும்பி வந்துவிட்டேன். அதன்பின்னர் அவ்வப்போது கிடைத்து கிடைத்த தமிழ் படங்களில் நடித்து வந்தேன்.
அப்போது தான் சூப்பர் டீலக்ஸ் படத்தில் ஷில்பா என்ற திருநங்கைக்கு மனைவியாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதில் நான் பெரிய அளவில் பேசப்பட்டேன். அந்த படத்தை பார்த்து அனுராக் காஷ்யாப் எனக்கு வாழ்த்து தெரிவித்திருந்தார். தற்போது காயத்ரி ஷங்கர் விஜய் நடித்து வரும் லியோ திரைப்படத்தில் முக்கிய ரோல் ஒன்றில் நடித்து வருகிறார். தொடர்ந்து கிடைக்கும் நல்ல கதைகளில் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார்.
இந்நிலையில் தற்போது Mad Max: Fury Road என்ற ஹாலிவுட் படத்தில் வரும் கதாபாத்திரம் போல அச்சு அசலாக மாறி எடுத்துக்கொண்ட லேட்டஸ்ட் போட்டோவை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்திழுத்துள்ளார். அந்த ரோலில் காயத்ரி நடித்திருந்தால் கூட சிறப்பாக இருந்திருக்கும் போல என ரசிகர்கள் மெர்சலாகிவிட்டார்கள். காயத்ரி சங்கரின் இந்த போட்டோவை பார்த்து ஹாலிவுட்டில் வாய்ப்புகள் கிடைத்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. அவ்வளவு மாஸாக இருக்கிறது என எல்லோரும் கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர்.
ஆக்சன் கிங் சூர்யா? கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்த “ரெட்ரோ” திரைப்படம் நேற்று மே தினத்தை முன்னிட்டு வெளியானது.…
ஆக்சன் அதகளம்… கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் நேற்று மே தினத்தை முன்னிட்டு வெளியானது. முழுக்க…
விஜய் டிவியில் கலகலப்பான தொகுப்பாளராக வலம் வந்தவர் பிரியங்கா தேஷ்பாண்டே. ஆரம்பத்தில ஒரு சில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிய இவர்,…
கணவருடன் ஏற்பட்ட பிரச்னையால் கயல் சீரியல் நடிகை தற்கொலைக்கு முயன்றதாக வெளியான தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சன் டிவியில் பிரைம்…
சூர்யா நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நேற்று உலகம் முழுவதும் வெளியான படம் ரெட்ரோ. சூர்யாவின் கங்குவா படத்திற்கு பிறகு…
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
This website uses cookies.