சினிமா / TV

இனி குட் பேட் அக்லிக்கு மூடு விழாதான்! மூணே வாரத்துல இப்படி சோலியை முடிச்சிட்டாங்களே?

ரசிகர்களுக்கான திரைப்படம்

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடிப்பில் கடந்த 10 ஆம் தேதி வெளியான “குட் பேட் அக்லி” திரைப்படம் அஜித் ரசிகர்களின் மத்தியில் கொண்டாடப்பட்ட திரைப்படமாக அமைந்தது. ஆனால் வெகுஜன ரசிகர்கள் இத்திரைப்படம் பழைய அஜித் திரைப்படங்களில் வந்த காட்சிகளை எல்லாம் கோர்த்து எடுத்தது போல் இருப்பதாக விமர்சித்தனர். எனினும் அஜித் ரசிகர்களுக்கு இத்திரைப்படம் ஒரு கொண்டாட்டமான திரைப்படமாக அமைந்தது. 

வசூலை வாரிக்குவித்த குட் பேட் அக்லி

இத்திரைப்படம் வெளிவந்து மூன்று வாரங்கள் முடிவடையவுள்ள நிலையில் இத்திரைப்படம் ரூ.227 கோடிகளுக்கும் மேல் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நாளை மே தினத்தை முன்னிட்டு சூர்யாவின் “ரெட்ரோ”, சசிகுமாரின் “டூரிஸ்ட் ஃபேமிலி” போன்ற திரைப்படங்கள் வெளிவருகின்றன. 

இதில் “ரெட்ரோ” திரைப்படத்திற்கு அதிகளவு திரையரங்குகள் ஒதுக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள திரையரங்குகளில் “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் திரையிடப்படுகிறது. இந்த இரண்டு திரைப்படங்களுக்குமே அதிகளவு எதிர்பார்ப்பு இருக்கிறது என்றுதான் கூறவேண்டும். 

அந்த வகையில் “குட் பேட் அக்லி” திரைப்படத்திற்கான திரையரங்குகள் சொற்பமாக குறைக்கபடும் வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. குறிப்பாக சென்னை, கோவை, மதுரை, திருப்பூர், திருச்சி, சேலம் போன்ற திரையரங்குகள் அதிகளவில் இருக்கும் நகரங்களில் ஒரு ஷோவோ அல்லது இரண்டு ஷோக்களோ  “குட் பேட் அக்லி” திரைப்படத்திற்க்கு ஒதுக்கப்படும் எனவும் இந்நகரங்களை தவிர்த்து தமிழகத்தின் மற்ற பகுதிகளில் “குட் பேட் அக்லி” திரைப்படத்திற்கு மூடு விழா நடத்தப்படும் எனவும் பேச்சுக்கள் அடிபடுகின்றன. இந்த நிலையில் மூன்றே வாரங்களில் “குட் பேட் அக்லி” திரைப்படம் விடைபெறவுள்ளது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.  

Arun Prasad

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

1 week ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

1 week ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

1 week ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

1 week ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

1 week ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.