ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடிப்பில் கடந்த ஏப்ரல் மாதம் 10 ஆம் தேதி வெளியான திரைப்படம் “குட் பேட் அக்லி”. இத்திரைப்படம் அஜித் ரசிகர்களின் மத்தியில் கொண்டாடப்பட்டது. எனினும் வெகுஜன ரசிகர்கள், இத்திரைப்படம் இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் போல் உள்ளதாக விமர்சனம் செய்தனர். எனினும் அஜித் ரசிகர்கள் இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், “இது அஜித் ரசிகர்களான எங்களுக்காகவே எடுக்கப்பட்ட திரைப்படம்” என கூறினார்கள்.
இவ்வாறு கலவையான வரவேற்பை பெற்ற இத்திரைப்படம் உலகளவில் ரூ.240 கோடிகளுக்கும் மேல் வசூல் செய்தது. “விடாமுயற்சி” திரைப்படத்தை ஒப்பிடும்போது இத்திரைப்படம் மிகப்பெரிய வெற்றிதான் என கூறப்படுகிறது. இந்த நிலையில் இத்திரைப்படத்தை குறித்த ஒரு அதிர்ச்சி தகவலை பகிர்ந்துள்ளார் தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம்.
“குட் பேட் அக்லியை பொறுத்தவரை அத்திரைப்படத்தின் தயாரிப்பாளருக்கு நஷ்டம்தான் என திரையுலகில் பேசிக்கொள்கிறார்கள். தயாரிப்பாளருக்கு நஷ்டமா இல்லையா என்பது அத்தயாரிப்பாளர் வெளிப்படையாக கூறினால்தான் உண்மை தெரிய வருமே தவிர நமக்கெல்லாம் கணக்கு தெரியாது. ஆனால் விடாமுயற்சியை பொறுத்தவரை நிச்சயமாக தெரியும் அது கண்டிப்பாக தயாரிப்பாளருக்கு நஷ்டம்தான் என்று” என அப்பேட்டியில் பேசியுள்ளார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.