கோலிவுட்டில் கவுண்ட்டர் வசனத்திற்கென்றே பெயர் போனவர் கவுண்டமணி. இவர் சினிமாவிற்குள் நுழைவதற்கு முன்பு நாடக நடிகராக பல மேடை நாடகங்களிலும் வீதி நாடகங்களிலும் நடித்து வந்தார். அதனை தொடர்ந்து சினிமாவிற்குள் காலடி எடுத்து வைத்த இவர் கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கும் மேல் தமிழ் சினிமாவின் டாப் காமெடி நடிகராக கோலோச்சினார்.
சமீபத்தில் கூட “ஒட்ட ஓட்டு முத்தையா” என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்திருந்தார். இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்துகொண்ட பயில்வான் ரங்கநாதன் கவுண்டமணி குறித்த ஒரு சம்பவத்தை பகிர்ந்துகொண்டுள்ளார்.
கவுண்டமணி தான் நடிக்கும் காட்சிகளை படமாக்குவதற்கு முன்பு ஒவ்வொரு காட்சிக்கும் சக நடிகர்களுடன் ரிகர்சல் பார்ப்பாராம். அந்த ஒத்திகையில் என்ன வசனம் பேசப்பட்டதோ அதே வசனத்தைதான் Take எடுக்கையிலும் பேசவேண்டுமாம். சக நடிகர் ஒரு வார்த்தை அதிகமாக பேசினால் கூட “நீ ஒத்திகை பார்க்கும்போது இந்த டயலாக் எல்லாம் பேசலையே. ஏன் இப்படி எக்ஸ்ட்ராவா டயலாக் சேர்க்குற. வேணாம், என்ன வசனம் ஒத்திகை அப்போ பேசுனியோ அதை மட்டும் பேசு” என்று அங்கேயே கடிந்துகொள்வாராம். இவ்வாறு கவுண்டமணி மிகவும் கறாராக இருப்பார் என பயில்வான் ரங்கநாதன் அப்பேட்டியில் கூறியுள்ளார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.