சினிமா / TV

8 வருடங்களாக கிடப்பில் கிடக்கும் ஜிவி பிரகாஷ் படம்? திடீரென சர்ப்ரைஸ் தந்த படக்குழு?

மதகஜராஜாவை தொடர்ந்து…

விஷால் நடிப்பில் கடந்த பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியான “மதகஜராஜா” திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இத்திரைப்படம் கிட்டத்தட்ட 12 ஆண்டுகள் கிடப்பில் கிடந்தது. அதன் பின் கடந்த ஜனவரி மாதம் வெளிவந்து பட்டையை கிளப்பியது. இவ்வாறு “மதகஜராஜா” திரைப்படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து 8 வருடங்களாக கிடப்பில் கிடந்த ஜிவி பிரகாஷ் திரைப்படம் ஒன்று விரைவில் வெளியாகவுள்ளதாக ஒரு செய்தி வெளிவந்துள்ளது. 

8 வருடங்களாக கிடப்பில் கிடந்த படம்?

கடந்த 2017 ஆம் ஆண்டு ஜிவி பிரகாஷ் நடிப்பில் உருவான திரைப்படம் “அடங்காதே”. இத்திரைப்படத்தை சண்முகம் முத்துசாமி என்பவர் இயக்கியுள்ளார். இதில் ஜிவி பிரகாஷுக்கு ஜோடியாக சுரபி நடித்துள்ளார். மேலும் இவர்களுடன் சரத்குமார், மந்த்ரா பேடி, தம்பி இராமையா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். 

இத்திரைப்படத்தின் வெளியீடு சில காரணங்களால் தள்ளிப்போய்க்கொண்டே இருந்தது. இவ்வாறு இத்திரைப்படம் உருவாகி 8 வருடங்களாகியும் இன்னும் வெளிவரவில்லை. இந்த நிலையில் இத்திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. அதாவது இத்திரைப்படம் வருகிற ஆகஸ்ட் 27 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி அன்று வெளிவரவுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றா. “மதகஜராஜா”  திரைப்படத்தை போல் இத்திரைப்படமும் வெற்றிபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Arun Prasad

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

1 week ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

1 week ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

1 week ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

1 week ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

1 week ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.