சினிமா / TV

செத்துப்போனவங்களை ஏன் பாட வைக்கனும்?-ஆதங்கத்தில் ஹாரிஸ் ஜெயராஜ்!

ஹாரிஸ் மாமா

90ஸ் கிட்களால் ஹாரிஸ் மாமா என்று செல்லமாக அழைக்கப்படும் ஹாரிஸ் ஜெயராஜ், 2000களில் கோலிவுட்டின் இசை உலகில் பெரும் பாய்ச்சலை நிகழ்த்தியவர். ஏ.ஆர்.ரஹ்மானிற்குப் பிறகு அடுத்தக் கட்ட நவீன மற்றும் தரமான ஒலியுடன் கூடிய இசையை ரசிகர்களுக்கு வழங்கி தமிழ் சினிமா இசை உலகில் கோலோச்சிக்கொண்டிருந்தவர் ஹாரிஸ் ஜெயராஜ். 

சமீப காலமாக இவருக்கு பட வாய்ப்புகள் சற்று குறைந்துப்போனாலும் இவர் பிசியாக இருந்த காலகட்டத்தில் இசையமைத்த பாடல்கள் அனைத்தும் காலத்தை தாண்டியும் ஒலிக்க கூடியவையாக அமைந்தன. இந்த நிலையில் ஹாரிஸ் ஜெயராஜ் தனது கான்செர்ட் ஒன்றில் பத்திரிக்கையாளர்களுக்கு அளித்த பேட்டி ஒன்று இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

செத்துப்போனவங்களை ஏன் பாட வைக்கனும்?

ஹாரிஸ் ஜெயராஜிடம் பத்திரிக்கையாளர்கள் AI குறித்து கருத்து கேட்டனர். அதற்கு ஹாரிஸ் ஜெயராஜ், “AI நான் பயன்படுத்தியதே இல்லை. அதனால் எனக்கு அதை பற்றி தெரியாது. வருங்காலத்திலும் நான் AI-ஐ பயன்படுத்த மாட்டேன். அதற்குதான் பாடகர்கள் பலர் இருக்கிறார்களே? பாடகர்கள் யாரும் இல்லை என்றால் நாம் யோசிக்கலாம். அனைவரும் இருக்கும்போது எதற்கு?” என பதிலளித்தார். 

“AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இறந்து போன பாடகர்களின் குரலை கொண்டு வருகிறார்கள். நீங்கள் அப்படி என்ன பாடகரை கொண்டுவர விரும்புகிறீர்கள்?” என ஒரு பத்திரிக்கையாளர் கேட்ட கேள்விக்கு, “என்னை பொறுத்தவரை உயிரோடு இருக்கும் பாடகர்கள்தான் எனக்கு பிடித்தவர்கள். எவ்வளவோ பாடகர்கள் வாழ்க்கையில் திருப்புமுனை இல்லாமல் வாய்ப்பிற்காக அலைந்துகொண்டிருக்கிறார்கள். அவர்களை விட்டுவிட்டு ஏன் இறந்துப்போனவர்களை பாட வைக்கச்சொல்கிறீர்கள்? உயிரோடு இருப்பவர்களை கொண்டாடுங்கள். இறந்துப்போன பாடகர்கள் எல்லாம் ஏற்கனவே புகழ்பெற்று வாழ்ந்து முடித்தவர்கள். அவர்களின் பிள்ளைகளுக்கு வேண்டுமானால் வாய்ப்பு கொடுங்களேன். அவர்கள் சந்தோஷப்படுவார்களே” என்று ஹாரிஸ் ஜெயராஜ் பதிலளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Arun Prasad

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

2 weeks ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.