அனிருத்தின் ஹுக்கும் கான்செர்ட் இன்று சென்னை அருகே உள்ள கூவத்தூரில் நடைபெறவுள்ளது. இந்த கான்செர்ட்டில் கிட்டத்தட்ட 30,000 பார்வையாளர்களுக்கு மேல் கலந்துகொள்ள உள்ளனர். இந்த நிலையில் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியரின் அனுமதி இல்லாமல் இந்த இசை நிகழ்ச்சி நடக்கவிருக்கிறது எனவும் இந்த இசை நிகழ்ச்சி நடக்கவிருக்கும் இடத்தில் கழிவறைகள், தண்ணீர் வசதி போன்ற எந்த வசதிகளும் செய்யப்படவில்லை எனவும் செய்யூர் தொகுதி எம் எல் ஏ பனையூர் பாபு உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார்.
மேலும் இசை நிகழ்ச்சி நடக்கவிருக்கும் இடத்தில் குறுகலான சாலை இருப்பதால் அங்கே போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் பனையூர் பாபு அந்த வழக்கில் குறிப்பிட்டிருந்தார்.
இந்த வழக்கு நேற்று நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் என்பவரின் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. இந்த நிலையில் எந்த ஒரு அசம்பாவிதமும் நடக்காத வண்ணம் காவல் துறை கண்காணிக்க வேண்டும் என அறிவுறுத்தி அனிருத்தின் இசை நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்கி உத்தரவிட்டார் நீதிபதி. மேலும் பனையூர் பாபுவின் வழக்கையும் நிலுவையில் வைத்தார். இதன் மூலம் அனிருத்தின் இசை நிகழ்ச்சிக்கு எந்த வித தடையும் இல்லை என தெரிய வந்துள்ளது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.