விக்னேஷ் சிவன்-நயன்தாரா திருமண வீடியோவான நயன்தாரா; பியாண்ட் தி ஃபேரி டேல் என்ற ஆவணப்படம் கடந்த ஆண்டு நெட்பிலிக்ஸில் வெளியானது. இந்த ஆவணப்படத்தை டார்க் ஸ்டூடியோ என்ற நிறுவனம் நெட்பிலிக்ஸுடன் இணைந்து தயாரித்திருந்தது.
இந்த ஆவணப்படத்தின் டிரெயிலர் வெளிவந்தபோது அதில் “நானும் ரவுடிதான்” திரைப்படத்தின் ஒரு காட்சி இடம்பெற்றிருந்தது. இதனை தொடர்ந்து அத்திரைப்படத்தின் தயாரிப்பாளர் தனுஷ், ரூ.10 கோடி நஷ்டஈடு கேட்டு வழக்கு தொடர்ந்தார். இதனை தொடர்ந்து நயன்தாரா தனுஷை கடுமையாக விமர்சித்து அறிக்கை வெளியிட அதன் பின் தனுஷ் அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஒரு அறிக்கை வெளியிட இணையம் சூடுபிடித்தது. இவ்வழக்கு தற்போது சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
இதனிடையே நயன்தாராவின் ஆவண படத்தில் “சந்திரமுகி” திரைப்படத்தின் காட்சிகளை பயன்படுத்த தடை கோரி அத்திரைப்படத்தின் உரிமையை வைத்திருக்கும் ஏபி இன்டர்நேஷனல் நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது. மேலும் ரூ.5 கோடி நஷ்டஈடு வழங்க வேண்டும் எனவும் தனது மனுவில் குறிப்பிட்டிருந்தது.
இந்த நிலையில் இவ்வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி செந்தில்குமார் முன் விசாரணைக்கு வந்தது. இவ்வழக்கை விசாரித்த நீதிபதி, இவ்வழக்கு தொடர்பாக பதில் மனுத் தாக்கல் செய்ய ஆவணப் படத்தை தயாரித்த டார்க் ஸ்டூடியோ நிறுவனத்திற்கு அக்டோபர் 6 வரை அவகாசம் வழங்கி உத்தரவிட்டார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.