2k கிட்ஸ்களின் டி.ராஜேந்தர் என தன்னை அழைப்பதற்கும், தனக்கான முன்மாதிரியாக அவர் ஏன் திகழ்கிறார் என்றும் ஹிப் ஆதி விளக்கம் அளித்துள்ளார்.
சென்னை: கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான ஆம்பள திரைப்படத்தின் ஒரே ஒரு பிராக் மட்டும் போட்டு தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமானார் ஹிட் ஹாப் ஆதி இதனை எடுத்து முஸ்லிம்கள் நடிப்பில் வெளியான இன்று நேற்று நாளை தனது இசை மூலம் கவனம் பெற்ற பிற்கா பாதி மோகன் ராஜா இயக்கத்தில் ஜெயம் ரவி அரவிந்த்சாமி நடிப்பின் மிரட்டலில் வெளியாகி மெகா ஹிட் அடித்த தனி ஒருவன் திரைப்படத்தின் மாபெரும் வெற்றிக்கு ஒரு முக்கிய தூணாக மாறினார் ஹிப் ஹாப் ஆதி இதனை அடுத்து இவரது இசைக்கென தனி ரசிகர் பட்டாளம் உருவாகத் தொடங்கியது.
பின்னர் 2017 ஆம் ஆண்டு விவேக் உடன் இணைந்து ஒரு திரைப்படத்தை இயக்கியும் நடித்து மிரட்டினார் ஹிப் ஹாப் ஆதி. மீசைய முறுக்கு என்ற படம் இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த நிலையில், இவரது இயக்கம், நடிப்பு மற்றும் இசையில் இறுதியாக வெளியான திரைப்படம் கடைசி உலகப் போர். இப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றது.
இந்த நிலையில், சமீபத்தில் தனியார் யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்த ஹிப் ஹாப் ஆதி, தன்னை டி. ராஜேந்தர் எனக் கூறுவது குறித்து பகிர்ந்தார். அதில், ” ஒரு விழாவில், என்னை அழைக்கும்போது 2k கிட்ஸ்களின் டி.ராஜேந்தர் என கூப்பிட்டனர். அதற்கு நக்கல் கலந்த ஒரு ஆரவாரம் எழுந்தது.
ஆனால், அவர், கதை, திரைக்கதை, இயக்கம், பாடல், இசை என அனைத்திலும் வித்தகர். அவரது காலக்கட்டத்தில் டி.ராஜேந்தர் படம் வருகிறது என்று சொன்னாலே மற்ற நடிகர்கள் பயப்படுவர். எனக்கு இசையில் ஏ.ஆர்.ரகுமான் ஒரு முன்மாதிரி, டி.ராஜேந்தர் சார் எனது ஒட்டுமொத்த சினிமாவின் முன்னுதாரணம்” என்றார். தற்போது இது தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க : கோடிகளை குவிக்கும் அமரன்…. 8வது நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
கனவுக்கன்னி தமிழ்நாட்டு இளைஞர்களின் தற்போதைய கனவுக்கன்னியாக வலம் வருபவர்தான் கயாது லோஹர். கன்னட திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமான கயாது,…
உத்தரபிரதேசத்தில் விசித்திரமான சம்பவம் அடிக்கடி அரங்கேறி வருகிறது. குறிப்பாக மருமகனுடன் மாமியார் ஓடிய சம்பவம் அண்மையில் பேசுபொருளானது. தற்போது தாடி…
சென்னை புளியந்தோப்பு பகுதியில் அமைச்சர் சேகர் பாபு பங்கேற்கும் நிகழ்ச்சியில், பிளீச்சிங் பவுடருக்கு பதிலாக கோலமாவு போடப்பட்டதாக புகார் எழுந்தது.…
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையல், ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே விளாங்காட்டு வலசு கிராமத்தில் தனியாக வசித்து…
ஆக்சன் கிங் சூர்யா? கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்த “ரெட்ரோ” திரைப்படம் நேற்று மே தினத்தை முன்னிட்டு வெளியானது.…
ஆக்சன் அதகளம்… கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் நேற்று மே தினத்தை முன்னிட்டு வெளியானது. முழுக்க…
This website uses cookies.