கிரிக்கெட் வீரரா; அடையாளம் தெரியலை; ஹிப் ஹாப் தமிழா ஆதிக்கு காத்திருந்த அதிர்ச்சி!!

தமிழில் இசையமைப்பாளராக, நடிகராக வலம் வருபவர் ஹிப் ஹாப் ஆதி.இவர் சமீபத்தில் லண்டன் சென்றிருந்தார்.அவரை கண்ட ரசிகர்கள் பலரும் அவருடன் செல்ஃபி எடுத்துக்கொண்டனர்.

இதற்கிடையில் ஒரு நபர் ஆதியை சந்தித்து அவர்க்கு நன்றி சொல்லி இருக்கிறார்.அவர் எதற்காக நன்றி சொல்கிறார் என விசாரித்த பிறகே ஆதிக்கு உண்மை தெரிய வந்திருக்கிறது. ஆதியை கேப்டன் ரோஹித் சர்மா என தவறாக புரிந்து கொண்டிருக்கிறார் அந்த நபர்.

என்னை பார்த்தால் ரோஹித் சர்மா மாதிரி தெரிகிறதா என ஆதி கேட்க அவரும் ஆமாம் என சொல்லி இருக்கிறார். இதையடுத்து நான் ரோஹித் சர்மா இல்லை. நான் தமிழ்நாட்டைச் சேர்ந்தவன். நான் ஒரு இசையமைப்பாளன் என்று கூறியிருக்கிறார் ஆதி. அதை கேட்ட அந்த நபர் சிரித்துவிட்டு இடத்தை காலி செய்திருக்கிறார்.

17 ஆண்டுகள் கழித்து டி20 உலகக் கோப்பையை வென்றிருக்கிறது இந்திய அணி. இதையடுத்து ஹிட்மேன் ரோஹித் சர்மா, விராட் கோஹ்லி உள்ளிட்ட வீரர்களுக்கு ரசிகர்கள் தொடர்ந்து சோசியல் மீடியாவில் தங்களது நன்றியை தெரிவித்த வண்ணம் உள்ளனர்.

தனக்கு ஏற்பட்ட இந்த நிகழ்வை ஆதி சோசியல் மீடியாவில் பகிர்ந்து கொண்டார். எல்லோரும் போட்டோ எடுத்ததை பார்த்துவிட்டு, என் பின்னால் வந்தார். பக்கத்தில் வந்ததும் அட நம்மாளுனு சொல்லி போட்டோ எடுத்தார்.நான் சிட்னியில் இருந்து வருகிறேன் என்றார். ஓ அப்படியா ஹலோனு என்றேன். பிறகு எனக்கு நன்றி சொன்னார்.சரி நம்ம பாட்டால் கவரப்பட்டார் போல என நினைத்தேன் இருந்தாலும் சந்தேகமாக இருந்தது. நமக்கு எதற்காக நன்றி சொல்கிறார் என அவரிடமே கேட்டேன். உலகக் கோப்பையை வென்றதற்கு நன்றி என சொன்னார். சார், நீங்க வேற யாரோனு நினைச்சு என்னுடன் போட்டோ எடுக்கிறீங்கனு சொன்னேன். இல்லை இல்லை நீங்க யாருனு எனக்கு தெரியும் என்றார்.யாருனு சொல்லுங்க என கேட்டதற்கு ரோஹித் சர்மானு சொன்னார் என்று பதிவிட்டார்.

இதை பார்த்த ரசிகர்கள் பலரும் உங்களை பார்த்தால் ரோகித் ஷர்மா போல் உள்ளது. ஆனால் உங்களை விட அகில உலக சூப்பர் ஸ்டார் சிவாவை பார்த்தால் தான் ரோகித் சர்மாவை போல் தெரிகிறார்.நீங்கள் தவறான ரோகித் சர்மாவை டேக் செய்து விடப் போகிறீர்கள் நீங்கள் டேக் செய்தது “சிக்கந்தர் சார்மாவாக” இருக்கலாம் என காமெடியாக பதிவிட்டனர்.

Sudha

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

2 weeks ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.