‘என்னை பலாத்காரம் செய்ய முயன்றதாக புகார் கொடுப்பேன்’… வீட்டில் வேலை செய்த இளைஞருக்கு மிரட்டல் விடுத்த பிரபல நடிகை..?

பார்வதி நாயர் தன்மீது அளித்த திருட்டுபுகார் உண்மையில்லை என்றும், அவர் தன்னை அடித்து துன்புறுத்தியதாகவும் சுபாஷ் சந்திர போஸ் என்பவர் தேனாம்பேட்டை போலீஸில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார்.

அஜித்தின் என்னை அறிந்தால் படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக நடித்திருந்தவர் பார்வதி நாயர். இவர் தமிழில் கமல்ஹாசனின் உத்தம வில்லன், பார்த்திபன் இயக்கிய கோடிட்ட இடங்களை நிரப்புக, உதயநிதி ஸ்டாலின் உடன் நிமிர், விஜய் சேதுபதியின் சீதக்காதி போன்ற படங்களில் நடித்துள்ளார். தற்போது இவர் நடிப்பில் ஆலம்பனா என்கிற திரைப்படம் தயாராகி உள்ளது. இதில் வைபவ்வுக்கு ஜோடியாக நடித்துள்ளார் பார்வதி.

வளர்ந்து வரும் நடிகையான இவர் சென்னை நுங்கம்பாக்கம் காவல்நிலையத்தில் கடந்த மாதம் பரபரப்பு புகார் ஒன்றை அளித்தார். அதில் தனது வீட்டில் இருந்து விலையுயர்ந்த கடிகாரங்கள், ஐபோன் மற்றும் லேப்டாப் என 10 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் காணாமல் போனதாக அந்த புகாரில் அவர் தெரிவித்திருந்தார். இவற்றையெல்லாம் தன்வீட்டில் பணிபுரிந்த சுபாஷ் சந்திர போஸ் என்கிற இளைஞன் தான் திருடிவிட்டதாகவும் பார்வதி நாயர் கூறி இருந்தார்.

இந்நிலையில், தன் மீது திருட்டு புகார் அளித்த பார்வதி நாயர் மீது சுபாஷ் சந்திர போஸ் சென்னை தேனாம்பேட்டை காவல்நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில் பார்வதி நாயர் தன்மீது அளித்த திருட்டுபுகார் உண்மையில்லை என்றும், அவர் தன்னை அடித்து துன்புறுத்தியதால் தான் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதுமட்டுமின்றி இரவு நேரங்களில் ஆண் நண்பர்களை வீட்டுக்கு அழைத்து அவர்களுக்கு பார்வதி நாயர் போதை பார்ட்டி கொடுத்ததாகவும், ஆண் நண்பர்களுடன் அவர் தனி அறையில் இருந்ததை நான் பார்த்துவிட்டதால் என்மீது அவருக்கு கோபம் ஏற்பட்டது. இந்த சம்பவத்துக்கு பின்னர் தான் என்னை அநாகரிகமாக நடத்தி வந்தார்.

என்னை அடிச்சு துன்புறுத்தி, என்மீது எச்சில் துப்பி கடும் மன உளைச்சலுக்கு ஆளாக்கினார். என்மீதான திருட்டு புகாருக்கு மறுப்பு தெரிவித்து நான் புகார் அளித்ததை அறிந்ததும், ‘நீ என் மீதே புகார் கொடுக்குறியா… நீ என்னை பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சி செய்ததாக நான் உன்மீது புகார் கொடுப்பேன்’ என்று என்னை அழைத்து மிரட்டினார்.

நான் எதையும் அவரது வீட்டில் இருந்து திருடவில்லை. அவர் வேண்டுமென்றே பொய் புகார் கொடுத்திருக்கிறார். இந்த விவகாரத்தில் அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுபாஷ் சந்திரபோஸ் தெரிவித்துள்ளார். அவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் தேனாம்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Poorni

Recent Posts

இரத்தக்காட்டேரியாக மாறும் கியூட் நடிகை? ராஷ்மிகா மந்தனாவின் புதிய ஹாரர் படத்தின் கதை இதுதானா?

நேஷனல் கிரஷ் இந்திய இளைஞர்களின் மத்தியில் நேஷனல் கிரஷ்ஷாக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா. இவரின் கியூட்டான ரியாக்சன்களுக்காகவே இவரை…

12 hours ago

வெகு கால இடைவெளிக்குப் பிறகு டிவி பேட்டியில் தோன்றும் அஜித்! அதிசயம் ஆனால் உண்மை!

பத்ம பூஷன் அஜித்குமார் நேற்று ஜனாதிபதியின் கைகளால் இந்தியாவின் உயரிய விருதான பத்ம பூஷன் விருதை பெற்றார் அஜித்குமார். தனது…

14 hours ago

Bye Bye Stalin என மக்கள் சொல்லும் போது சட்டை கிழித்து தவழாமல் இருந்தால் சரி : இபிஎஸ் விமர்சனம்!

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது X தளப்பதிவில், கள்ளச்சாராய ஆட்சிக்கு! கள்ளக்குறிச்சியே சாட்சி! சட்டம் ஒழுங்கு சீர்கேட்டிற்கு மாணவர்கள்…

14 hours ago

சிம்புவே ரெடி; ஆனா ஷூட்டிங் ஆரம்பிக்கல! இயக்குனர் செய்த காரியத்தால் தள்ளிப்போகும் STR 49?

STR 49 மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசனுடன் சிம்பு இணைந்து நடித்த “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் 5 ஆம்…

15 hours ago

அஜித் விருது வாங்கிய நேரம்.. ஹீரா குறித்து அவதூறு : பின்னணியில் அரசியலா?

நடிகர் அஜித்குமாருக்கு நேற்று பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது. இது அஜித ரசிகர்கள் மட்டுமல்லாமல் உலகளவில் உள்ள தமிழர்களுக்கு பெருமை…

15 hours ago

அவருக்கு நான் அம்மாவா? கடுப்பான கஸ்தூரி : எந்த நடிகர்னு தெரியுமா?!

தமிழ் சினிமாவில் கதநாயாகியாக நடித்து பின்னர் வாய்ப்பு இல்லாமல் குடும்பம், குழந்தை என செட்டில் ஆன நடிகைதான் கஸ்தூரி. திருமணத்திற்கு…

16 hours ago

This website uses cookies.