“தக் லைஃப்” திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் கன்னட நடிகர் சிவராஜ்குமார் கலந்துகொண்ட நிலையில் அவரை குறித்து அவ்விழாவில் பேசிய கமல்ஹாசன், “கர்நாடகாவில் இருக்கும் ராஜ்குமாரின் குடும்பம் என்னுடைய குடும்பம். எனவே அவர் இங்கு வந்திருக்கிறார். ஆதலால்தான் நான் பேச்சை தொடங்கும்போதே உயிரே உறவே தமிழே என தொடங்கினேன். தமிழில் இருந்துதான் கன்னடம் தோன்றியது. அதை நீங்களும் ஒப்புக்கொள்வீர்கள்” என பேசியிருந்தார்.
கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த பல கன்னட அமைப்புகள் இவரது பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். “தக் லைஃப்” திரைப்படத்தின் போஸ்டர்களும் கிழிக்கப்பட்டன. கர்நாடக மாநில முதல்வர் சித்தராமையா, “கன்னட மொழியின் வரலாறு தெரியாமல் கமல்ஹாசன் பேசுகிறார்” என கண்டனம் தெரிவித்தார். கமல்ஹாசன் மன்னிப்பு கேட்கவில்லை என்றால் “தக் லைஃப்” திரைப்படத்தை கர்நாடகாவில் வெளியிட விட மாட்டோம் என பல கன்னட அமைப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இதனை தொடர்ந்து இது குறித்து பேசிய கமல்ஹாசன், “அன்பு என்றும் மன்னிப்பு கேட்காது. தமிழில் இருந்துதான் கன்னடம் தோன்றியது என்ற கருத்துக்கு மன்னிப்பு கேட்க முடியாது” என கூறினார்.
“தக் லைஃப்” திரைப்படத்தின் கர்நாடக மாநில வெளியீட்டு உரிமையை ஃபைவ் ஸ்டார் செந்தில் என்பவர் ரூ.10 கோடிக்கு வாங்கியுள்ளாராம். அந்த வகையில் ஒரு வேளை இத்திரைப்படம் கர்நாடகாவில் வெளியாகாத பட்சத்தில் கமல்ஹாசனுக்கு ரூ.20 கோடி நஷ்டம் ஏற்படக்கூடும் என கூறப்படுகிறது. எனினும் கமல்ஹாசன் அந்த நஷ்டத்தை தாங்க தயாராக உள்ளதாகவும் ஆனால் மன்னிப்பு கேட்க தயாராக இல்லை எனவும் சினிமா பத்திரிக்கையாளர்கள் கூறுகின்றனர்.
மன்னிப்பு கேட்க முடியாது “தக் லைஃப்” திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் கமல்ஹாசன் தமிழில் இருந்துதான் கன்னடம் தோன்றியது என்று…
தமிழில் இருந்து தான் கன்னடம் பிறந்தது என தக் லைஃப் பிரமோஷன் நிகழ்ச்சயில் நடிகர் கமல் பேசியது பெரும் சர்ச்சையானது.…
டாப் ஹிட் படங்கள் எஸ்.ஜே.சூர்யா இயக்கிய முதல் திரைப்படம் “வாலி”. இதில் அஜித்குமார் கதாநாயகனாக நடித்திருந்தார். இத்திரைப்படம் மாஸ் ஹிட்…
மதுரை கோச்சடை பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் வைத்து மதுரை தேனி திண்டுக்கல் ஆகிய சட்டமன்றத் தொகுதியில் நிறைவு…
முன்னணி காமெடி நடிகர் தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகராக வலம் வருகிறார் யோகி பாபு. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான…
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பெஞ்சல் புயல் காரணமாக தமிழ்நாட்டில் கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை உள்ளிட்ட பகுதிகள் பெரிதும்…
This website uses cookies.