புஷ்பா-2 சிறப்பு காட்சியின் போது பெண் ஒருவர் உயிரிழந்த விவகாரத்தில் நேற்று அல்லு அர்ஜுனிடம் போலீசார் பல கேள்விகளை எழுப்பி விசாரணை மேற்கொண்டனர்.
கடந்த டிசம்பர் 4ஆம் தேதி புஷ்பா2 சிறப்பு காட்சியின் போது கூட்ட நெரிசலில் சிக்கி ரேவதி என்ற பெண் உயிரிழந்தார்,அவருடைய மகன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்நிலையில் இந்த சம்பவத்திற்கு அல்லு அர்ஜுன் தான் காரணம் என பல அரசியல்வாதிகள்,பொதுமக்கள் அல்லு அர்ஜுன் மீது புகார்களை கூறி வந்தனர்.இந்த சம்பவம் காரணமாக நேற்று ஹைதராபாத் சிக்கடப்பள்ளி காவல் நிலையத்தில் அல்லு அர்ஜுன் நேரில் விசாரணைக்கு ஆஜர் ஆனார்.
அவர் கூட அவருடைய தந்தையும் சென்றிருந்தார்.கிட்டத்தட்ட மூன்று மணி நேரம் மேலாக போலீஸார் அல்லு அர்ஜுனிடம் பல கேள்விகளை எழுப்பினர்.விசாரணைக்கு முன்பு அல்லு அர்ஜுனிடம் சம்பவத்து அன்றைக்கு நடந்த நிகழ்வுகளை வீடியோவாக காண்பித்தனர்.அப்போது பெண் நெரிசலில் சிக்கி உயிரிழந்த காட்சியை பார்த்து கண்ணீர் வடித்தார்.
இதையும் படியுங்க: சினிமானா உயிர்…போலீஸ் வேலையை தூக்கி வீசிய பிரபல நடிகர்…ஆதரவு கொடுத்த வெற்றிமாறன்.!
அப்போது அவரிடம் ஜாமினில் வெளியே வந்து செய்தியாளர்கள் சந்திப்பை நீங்கள் எப்படி நடத்தலாம்?யார் உங்களுக்கு அனுமதி கொடுத்தது,போலீஸ் அனுமதி மறுத்தும் நீங்கள் திரையரங்கிற்கு சென்றது ஏன்? என பல கிடுக்குபிடி கேள்விகளை கேட்டனர்.
அப்போது இருட்டில் அங்கே நடந்த சம்பவம் எனக்கு தெரியவில்லை எனவும்,போலீஸார் எப்போது அழைத்தாலும் விசாரணைக்கு வர தயார் என்று அவர் சொன்னதாக தகவல் வெளியாகியுள்ளது.
வரிசையாக லைக் போட்ட விராட் கோலி பாலிவுட் ரசிகர்களின் கனவுக்கன்னியாக வலம் வருபவர் அவ்னீட் கவுர். இவர் பல ஹிந்தி…
பிரபல இயக்குநர் சொன்ன கதைப்படி படம் முழுவதும் பாவாடை கட்டிக்கிட்டு வரவேண்டும் என்பதால் படத்தில் இருந்து விலகியுள்ளார் சூப்பர் ஸ்டார்.…
தேர்தலை நோக்கி விஜய் வருகிற 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை நோக்கி விஜய் நடைபோட்டுக்கொண்டிருக்கும் நிலையில் சமீபத்தில் இரண்டு…
விஜய் டிவி நிகழ்ச்சி மூலம் பிரபலமாகி பெரிய திரையில் வாய்ப்பு பெற்றவர் நடிகர் யோகி பாபு. டைமிங் காமெடி மூலம்…
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பாஜக வடக்கு மண்டல் தலைவராக பாலகிருஷ்ணன் என்பவரது பதவி ஏற்பு விழா உசிலம்பட்டியில் உள்ள தனியார்…
யுவன் ஷங்கர் ராஜா இளையராஜாவின் இளைய மகனான யுவன் ஷங்கர் ராஜா, “அரவிந்தன்” திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர். தனது…
This website uses cookies.