உன் காசு எனக்கு வேண்டாம்… நீ போகலாம் – அஜித்திடம் கண்ணீர்விட்டு அழுத விஜயகாந்த்!

தேமுதிக தலைவரும், நடிகருமான விஜயகாந்த் (71) உடல் நலக்குறைவு காரணமாக கடந்த 28-ஆம் தேதி காலை காலமானார். பின்னர் விஜயகாந்த் உடல் பொதுமக்கள் அஞ்சலி செலுத்த அடுத்த மறுநாள் தீவுத்திடலில் வைக்கப்பட்டிருந்தது. அங்கு அரசியல் கட்சி தலைவர்கள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் இறுதி அஞ்சலி செலுத்தினர்.

இதைத்தொடர்ந்து, அன்று மாலை சென்னை, கோயம்பேட்டில் உள்ள தேமுதிக கட்சி தலைமை அலுவலகத்தில் கேப்டன் விஜயகாந்தின் உடல் 72 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. விஜயகாந்த் உடலுக்கு திரைத்துறையை சேர்ந்த பல பிரபலங்கள் நேரில் வந்து அஞ்சலி செய்து அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்தார்கள்.

மேலும், விஜயகாந்தை புதைக்கப்பட்ட கட்சி அலுவலகத்தில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் நேரில் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். இப்படியான நேரத்தில் விஜயகாந்த் செய்த பல நற்செயல்கள் குறித்து பேசப்பட்டு வருகிறது. அந்தவகையில் அஜித் மற்றும் விஜயகாந்திற்கு இடையே ஏற்பட்ட மனக்கசப்பு குறித்து தற்போது ஒரு தகவல் வெளியாகியுள்ளது.

விஜயகாந்த் நடிகர் சங்க தலைவராக இருந்த போது நடிகர் சங்கத்தை கடனில் இருந்து மீட்டு எடுக்க திரையுலக நட்சத்திரங்கள் அனைவரையும் ஒன்று திரட்டி மலேசியாவிற்கு அழைத்து சென்றார் சென்ற விஜயகாந்த் அங்கு மிகப்பெரிய அளவில் விழா நடத்தி நிதி திரட்டினார். அந்த விழாவிற்கு ரஜினிகாந்த், கமல் ஹாசன், விஜய் என தமிழ் திரையுலக நட்சத்திரங்கள் அனைவரும் கலந்துக்கொண்டனர்.

ஆனால், நடிகர் அஜித் அந்த விழாவில் கலந்துக்கொள்ளவில்லை. இதனால் அஜித் மீது கடுங்கோபம் அடைந்த விஜயகாந்தை நேரில் சந்தித்து ஒரு தொகை கொடுத்துள்ளார் அஜித். ஆனால், விஜயகாந்த் அதை வாங்க மறுத்து நாங்கள் எதிர்பார்த்ததை விட அதிக வருமானம் எங்களுக்கு கிடைத்துவிட்டது ” உங்க காசு எனக்கு வேணாம்” என முகத்தில் அடித்தாற்போல் கூறினாராம்விஜயகாந்த்.

பின்னர் அஜித் தனக்கு ஷூட்டிங்கின் போது முதுகில் பலத்த காயம் ஏற்பட்டது. ஆப்ரேஷன் செய்து ஓய்வெடுத்திருந்ததால் தான் தன்னால் வரமுடியவில்லை என சட்டையை கழட்டி தனது முதுகை காட்டியவுடன் விஜயகாந்த் கண்ணீர்விட்டு அழுது என்னை மன்னித்துவிடு தம்பி என்றாராம். அதன் பின்னர் அவர் கொடுத்த பணத்தை மனசார வாங்கிக்கொண்டு வாழ்த்தினாராம் கேப்டன்.

UpdateNews360 Rajesh

Recent Posts

தாடி கணவனுக்கு ஸ்கெட்ச்… கேடி மனைவி வில்லத்தனம் : கொளுந்தனாருடன் ஓட்டம்!

உத்தரபிரதேசத்தில் விசித்திரமான சம்பவம் அடிக்கடி அரங்கேறி வருகிறது. குறிப்பாக மருமகனுடன் மாமியார் ஓடிய சம்பவம் அண்மையில் பேசுபொருளானது. தற்போது தாடி…

4 minutes ago

பிளீச்சிங் பவுடருக்கு பதில் கோலமாவு..கேள்வி கேட்ட செய்தியாளர் : நக்கலாக பதில் சொன்ன மேயர் பிரியா!

சென்னை புளியந்தோப்பு பகுதியில் அமைச்சர் சேகர் பாபு பங்கேற்கும் நிகழ்ச்சியில், பிளீச்சிங் பவுடருக்கு பதிலாக கோலமாவு போடப்பட்டதாக புகார் எழுந்தது.…

40 minutes ago

சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருக்கும் லட்சணம் இதுதானா? திமுக அரசுக்கு இபிஎஸ் கண்டனம்!

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையல், ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே விளாங்காட்டு வலசு கிராமத்தில் தனியாக வசித்து…

58 minutes ago

ஒரே நாளில் தட்டிதூக்கிய ரெட்ரோ! முதல் நாள் கலெக்சனே இவ்வளவு கோடியா? அடேங்கப்பா!

ஆக்சன் கிங் சூர்யா? கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்த “ரெட்ரோ” திரைப்படம் நேற்று மே தினத்தை முன்னிட்டு வெளியானது.…

2 hours ago

முன்னாடியே இது நடந்திருக்கு, ஆனா இதான் ஃபர்ஸ்ட் டைம்? ரெட்ரோ படத்தை பிரித்து மேய்ந்த பயில்வான்!

ஆக்சன் அதகளம்… கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் நேற்று மே தினத்தை முன்னிட்டு வெளியானது. முழுக்க…

2 hours ago

கதறி அழுத பிரியங்கா தேஷ்பாண்டே… 2வது திருமணத்திற்கு பிறகு நடந்த சம்பவம்!

விஜய் டிவியில் கலகலப்பான தொகுப்பாளராக வலம் வந்தவர் பிரியங்கா தேஷ்பாண்டே. ஆரம்பத்தில ஒரு சில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிய இவர்,…

3 hours ago

This website uses cookies.