தேமுதிக தலைவரும், நடிகருமான விஜயகாந்த் (71) உடல் நலக்குறைவு காரணமாக கடந்த 28-ஆம் தேதி காலை காலமானார். பின்னர் விஜயகாந்த் உடல் பொதுமக்கள் அஞ்சலி செலுத்த அடுத்த மறுநாள் தீவுத்திடலில் வைக்கப்பட்டிருந்தது. அங்கு அரசியல் கட்சி தலைவர்கள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் இறுதி அஞ்சலி செலுத்தினர்.
இதைத்தொடர்ந்து, அன்று மாலை சென்னை, கோயம்பேட்டில் உள்ள தேமுதிக கட்சி தலைமை அலுவலகத்தில் கேப்டன் விஜயகாந்தின் உடல் 72 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. விஜயகாந்த் உடலுக்கு திரைத்துறையை சேர்ந்த பல பிரபலங்கள் நேரில் வந்து அஞ்சலி செய்து அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்தார்கள்.
மேலும், விஜயகாந்தை புதைக்கப்பட்ட கட்சி அலுவலகத்தில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் நேரில் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். இப்படியான நேரத்தில் விஜயகாந்த் செய்த பல நற்செயல்கள் குறித்து பேசப்பட்டு வருகிறது. அந்தவகையில் அஜித் மற்றும் விஜயகாந்திற்கு இடையே ஏற்பட்ட மனக்கசப்பு குறித்து தற்போது ஒரு தகவல் வெளியாகியுள்ளது.
விஜயகாந்த் நடிகர் சங்க தலைவராக இருந்த போது நடிகர் சங்கத்தை கடனில் இருந்து மீட்டு எடுக்க திரையுலக நட்சத்திரங்கள் அனைவரையும் ஒன்று திரட்டி மலேசியாவிற்கு அழைத்து சென்றார் சென்ற விஜயகாந்த் அங்கு மிகப்பெரிய அளவில் விழா நடத்தி நிதி திரட்டினார். அந்த விழாவிற்கு ரஜினிகாந்த், கமல் ஹாசன், விஜய் என தமிழ் திரையுலக நட்சத்திரங்கள் அனைவரும் கலந்துக்கொண்டனர்.
ஆனால், நடிகர் அஜித் அந்த விழாவில் கலந்துக்கொள்ளவில்லை. இதனால் அஜித் மீது கடுங்கோபம் அடைந்த விஜயகாந்தை நேரில் சந்தித்து ஒரு தொகை கொடுத்துள்ளார் அஜித். ஆனால், விஜயகாந்த் அதை வாங்க மறுத்து நாங்கள் எதிர்பார்த்ததை விட அதிக வருமானம் எங்களுக்கு கிடைத்துவிட்டது ” உங்க காசு எனக்கு வேணாம்” என முகத்தில் அடித்தாற்போல் கூறினாராம்விஜயகாந்த்.
பின்னர் அஜித் தனக்கு ஷூட்டிங்கின் போது முதுகில் பலத்த காயம் ஏற்பட்டது. ஆப்ரேஷன் செய்து ஓய்வெடுத்திருந்ததால் தான் தன்னால் வரமுடியவில்லை என சட்டையை கழட்டி தனது முதுகை காட்டியவுடன் விஜயகாந்த் கண்ணீர்விட்டு அழுது என்னை மன்னித்துவிடு தம்பி என்றாராம். அதன் பின்னர் அவர் கொடுத்த பணத்தை மனசார வாங்கிக்கொண்டு வாழ்த்தினாராம் கேப்டன்.
கொரோனா பரவல் காரணமாக கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் 2022ஆம் வருடங்களில் இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு…
சுமாரான வரவேற்பை பெற்ற படம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு, திரிஷா, அபிராமி, அசோக் செல்வன், ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட…
வேலூரில் பாட்டாளி மக்கள் கட்சியின் ஒருங்கிணைந்த மாவட்ட பொதுகுழு கூட்டம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது இதில் மாவட்டத்தலைவர் வெங்கடேசன்,…
மனதை கவர்ந்த நடிகை :”அருவி” திரைப்படத்தின் மூலம் ரசிகர்களின் மனம் கவர்ந்த நடிகையாக தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அறிமுகமானவர் அதிதி…
சித்தூர் மாவட்டம், குப்பம் நகராட்சி எல்லையில் உள்ள நாராயணபுரத்தில், கடனை வசூலிக்க ஒரு பெண்ணை மரத்தில் கட்டி, தாக்கிய மனிதாபிமானமற்ற…
மன்னிப்பு கேட்க முடியாது “தக் லைஃப்” திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் கமல்ஹாசன் “தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது” என…
This website uses cookies.