2006 ஆம் ஆண்டு தெலுங்கில் வெளியான போட்டோ என்ற படத்தின் மூலம் சினிமாவுக்கு அறிமுகமானவர் நடிகை அஞ்சலி. தொடர்ந்து தெலுங்கு படங்களில் நடித்து வந்த அஞ்சலி, கற்றது தமிழ் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
தொடர்ந்து ஆயுதம் செய்வோம், அங்காடித் தெரு, ரெட்டை சுழி, மகிழ்ச்சி. தூங்கா நகரம், மங்காத்தா, எங்கேயும் எப்போதும் வத்திக்குச்சி உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.
தொடர்ந்து தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட படங்களில் நடித்து வருகிறார் அஞ்சலி தற்போது ஷங்கர் இயக்கத்தில் தெலுங்கு மற்றும் தமிழில் ராம்சரண் நடிப்பில் உருவாகி வரும் ஆர்சி 15 படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வருகிறார் அஞ்சலி.
இந்நிலையில் நடிகை அஞ்சலி ஊடகம் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் பல்வேறு சுவாரசிய தகவல்களை கூறியுள்ளார்.
அந்த நபருடன் ஏற்பட்ட ரிலேஷன்ஷிப்பால் தன்னுடைய கெரியரை கவனிக்க முடியாமல் போனதால் அந்த உறவு தவறான உறவு என தெரிவித்துள்ளார்.
கேரியருக்கு தடையாக இருக்கும் உறவை விட கேரியருக்கு முக்கியத்துவம் கொடுப்பதுதான் சிறந்தது என்றும் நடிகை அஞ்சலி தெரிவித்துள்ளார்.
நடிகை அஞ்சலி தெலுங்கு தயாரிப்பாளர் ஒருவரின் கட்டுப்பாட்டில் இருப்பதாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு தகவல் வெளியானது. அதன் காரணமாக தான் அஞ்சலி படங்களில் நடிக்கவில்லை என்றும் கூறப்பட்டது. இந்நிலையில் நடிகை அஞ்சலியே இப்படி கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஏற்கனவே நடிகை அஞ்சலிக்கு நடிகர் ஜெய்யுடன் காதல் என கிசுகிசு பரவியது. இந்நிலையில் அந்த பேட்டியில் பேசியுள்ள அஞ்சலி, தனக்கு நிறைய நண்பர்கள் இருப்பதாக கூறியுள்ளார்.
மேலும் அவர் தனக்கு இருந்த ஒரு ரிலேஷன்ஷிப் குறித்தும் பேசியிருக்கிறார் அஞ்சலி. தனக்கு ஒருவருடன் டாக்ஸிக் ரிலேஷன்ஷிப் இருந்ததாக கூறிய அவர் அந்த நபர் யார் என்பதை கூற மருத்துவிட்டார்.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ராஜலட்சுமி…
நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…
இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…
தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…
கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…
அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…
This website uses cookies.