எனக்கு ரெண்டு திருமணம் ஆனா என்ன? எனக்கு அவரு தான் வேணும் : விவாகரத்து ஆன பின்னும் அடம்பிடிக்கும் நடிகை!!

Author: Udayachandran RadhaKrishnan
13 January 2023, 1:46 pm
Parthiban Seetha- Updatenews360
Quick Share

சினிமா துறையில் உள்ளவர்கள் காதல் வயப்பட்டு, திருமணம் செய்து கொள்வதும், பின்னர் விவாகரத்து செய்வதும் சகஜமாகிவிட்டது.

அப்படித்தான் நடிகர், தயாரிப்பாளர், இயக்குனர் என பன்முகத் திறமை கொண்டவர் பார்த்திபன். இப்போது கூட இரவின் நிழல்கள் என்ற படத்தை இயக்கி நடித்தார். சபீமத்தில் பொன்னியன் செல்வன் படத்தில் நடத்திருந்தார்.

தானே இயக்கி தானே நடித்து மக்களிடையே மாபெரும் வரவேற்ப்பை பெற்ற திரைப்படம் தான் ஒத்த செருப்பு. இந்த திரைப்படம் மாபெரும் ஹிட்டு கொடுத்தது மட்டுமல்லாமல் பார்த்திபனுக்கு பல்வேறு பாராட்டையும் வாங்கி கொடுத்தது.

இவர் பிரபல நடிகை சீதாவை காதல் திருமணம் செய்துகொண்டார். அவர் 1985 முதல் நடிக்கத் தொடங்கி 1991 வரை தொடர்ந்தார்.

சிறிது காலம் நடிப்பிலிருந்து ஓய்வு எடுத்து 2002 முதல் மீண்டும் நடிக்கத் தொடங்கினார். 1985 ஆம் ஆண்டு ஆண் பாவம் என்ற தமிழ் திரைப் படத்தின் மூலம் திரையுலகில் நுழைந்தார்.

பல படங்களில் நடித்த அவர், சீரியல்களிலும் நடித்து வருகிறார். ஆனால் திருமண பந்தம் அவர்களுக்கு கைகூடவில்லை. பார்த்திபனை பிரிந்து தனியாக தனது தாயுடன் வசித்து வருகிறார் சீதா.

ஆனால் தன்னுடைய வாழ்க்கைக்காக நடிக்க வேண்டும் என்று முடிவு செய்து சின்னத்திரை தொடர்களில் நடித்தார். அபோது தான் சதீஷ் என்ற நபரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

அந்த வாழ்க்கையும் இவருக்கு கசந்து விட்டது. சதீஷ், சீதாவின் சொத்துகளை அபகரிக்க முயற்சி செயவ்தாக கூட சீதாவே அண்மையில் புகார் கூறியிருந்தார்.

இதனால் அந்த வாழ்க்கையும் அவருக்கு சரிபட்டு வரவில்லை. இந்த நிலையில் சீதா – பார்த்திபனின் மகள் திருமணத்தின் பொழுது பார்த்திபனுடன் வாழ சீதா விருப்பம் தெரிவித்ததாக செய்திகள் வெளியாகின.

ஆனால் சீதாவுடன் வாழ பார்த்திபன் மறுத்துவிட்டார். இப்போது நடிகை சீதா வெளிப்படையாகவே பார்த்திபனிடம் கேட்டு வருகிறார். அதற்கு பார்த்திபன் பிரிந்தது பிரிந்ததுதான் இனி ஒட்டி வாழ்வதற்கு ஒன்றும் இல்லை எனக்கும் இதில் விருப்பம் கிடையாது என்று தன்னுடைய உரையை முடித்துக்கொண்டாராம்.

Views: - 292

0

0