கடந்த சில நாட்களாக நடிகர் ஜெயம் ரவி மற்றும் மனைவி ஆர்த்தியின் விவாகரத்து விவகாரம் தான் கோலிவுட் சினிமாவில் பெரும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. ஜெயம் ரவி விவாகரத்தை அறிவித்த பிறகு அவரது மனைவி என் கவனத்திற்கு வராமலேயே ஜெயம் ரவி இந்த விவாகரத்து அறிவிப்பை வெளியிட்டு விட்டார்.
அவரின் இந்த தனிப்பட்ட முடிவால் நானும் என் குழந்தைகளும் தவிர்த்துக் கொண்டிருக்கிறோம். இது குடும்ப நலன் கருதி எடுக்கப்பட்ட முடிவு இல்லை முழுக்க முழுக்க அவருடைய தனிப்பட்ட முடிவு தான். நான் எத்தனையோ முறை அவருடன் பேசி விஷயத்தை சரி செய்ய நினைத்தேன்.
ஆனால், அவரோ எனக்கு பேசுவதற்கு கூட வாய்ப்பே கொடுக்கவில்லை என பகிரங்கமாக குற்றம் சாட்டியிருந்தார். இதனால் மேலும் கோலிவுட்டில் பெரும் பரபரப்பாக இந்த விஷயம் பேசப்பட்டு வந்தது. இதை அடுத்து நடிகர் ஜெயம் ரவி பிரபல பாடகியானா கெனிஷா பிரான்சிஸ் என்பவருடன் கிட்டத்தட்ட மூன்று மாதங்களாக கோவாவில் ரகசியம் வாழ்க்கை வாழ்ந்து வந்ததாகவும் இந்த உறவு அம்பலமாகியது.
அவர்களின் இந்த ரகசிய உறவை மனைவி ஆர்த்தி கண்டுபிடித்து ஆதாரத்துடன் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டிருந்தார். நடிகர் ஜெயம் ரவி பாடகி கெனிஷா பிரான்சிஸ் உடன் கோவாவில் அதிவேகமாக காரை ஓட்டியதற்காக கோவா போலீஸிடம் மாட்டிக் கொண்டு அங்கு அபராதம் கட்டிய செலான் சிலிப்பையும் மேலும் அதிக அடர்த்தி கொண்ட சட்டத்திற்கு விரோதமான கருப்பு ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட காரில் ஜெயம் ரவி பயணித்ததாலும் அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டிருந்த ஸ்லீப்பையும் அவர் சமூக வலைதளத்தில் வெளியிட்டிருந்தார்.
இதையும் படியுங்கள்: பரபரப்பாக காணப்படும் பின்னலாடை நிறுவனம்.. தொழிலாளர்கள் ஊருக்கு சென்றதால் வெறிச்சோடியது!!!
இதன் மூலம் ஜெயம் ரவி பாடகியுடன் தகாத தொடர்பு வைத்திருப்பது அம்பலமாகிவிட்டது. இந்த நிலையில் தற்போது சொல்ல வரும் தகவல் என்னவென்றால் ஜெயம் ரவி காதலிக்கும்போது ஆர்த்தியை தான் திருமணம் செய்து கொள்வேன் என தனது பெற்றோரிடம் வந்து கூறும் போது அவர்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் உடனடியாக ஜெயம் ரவி கத்தியை எடுத்து கையை அறுத்துக் கொள்வேன் என மிரட்டியதாகவும் அதன் பின்னர் பெற்றோர்கள் சமதித்ததாகவும் செய்திகள் கூறுகிறது. இந்த அளவுக்கு காதலித்து விட்டு இப்போது ஏன் இந்த பிரிவு? ஏன்அடுத்த பெண் மீது ஈர்ப்பு ?என ரசிகர்கள் பலரும் கேள்வி எழுப்பி விமர்சித்து வருகிறார்கள்.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பாஜக வடக்கு மண்டல் தலைவராக பாலகிருஷ்ணன் என்பவரது பதவி ஏற்பு விழா உசிலம்பட்டியில் உள்ள தனியார்…
யுவன் ஷங்கர் ராஜா இளையராஜாவின் இளைய மகனான யுவன் ஷங்கர் ராஜா, “அரவிந்தன்” திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர். தனது…
சென்னையில் நிருபர்கள் சந்திப்பில் பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் ஆலோசித்தது குறித்து பேசினார். நடுத்தர…
லோகி யுனிவர்ஸ் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் Lokesh Cinematic Universe என்ற ஒன்றை உருவாக்கி கோலிவுட்டில் ஒரு புதிய வரலாற்றையே…
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி முருகன் கோயில் மாட வீதியில் வேல் அமைந்துள்ள பகுதியில் காலை பக்தர்கள் தரிசனம் செய்து கொண்டிருந்தனர்.…
கனிமா… தமிழ் சினிமா இசை உலகில் மிகவும் தனித்துவமான இசையமைப்பாளராக இயங்கி வருபவர் சந்தோஷ் நாராயணன். தமிழ் சினிமா இசை…
This website uses cookies.