வீட்ல மளிகை சாமான் இல்ல… அதனால் தான் Divorce – நீலிக்கண்ணீர் வடிக்கும் சம்யுக்தா – வச்சி செய்யும் நெட்டிசன்ஸ்!

Author: Shree
3 June 2023, 1:18 pm
samyuktha vishnukanth
Quick Share

சினிமா துறையில் பொதுவாக சேர்ந்து நடிக்கும் பிரபலங்கள் காதல் செய்வதும், திருமணம் செய்வதும் வழக்கமான நடக்கும் ஒன்று தான். ஆனால் சிலருக்கு தான் இது ஒர்க் அவுட் ஆகும். அவர்கள் நல்ல ஜோடியாக ரசிகர்களால் பார்க்கப்படுவார்கள். அப்படி எல்லோரும் அமைவதில்லை. காதல் மிதப்பிலே போட்டோ ஷூட், ரீல்ஸ் வீடியோக்களில் மட்டும் காதலை வெளிப்படுத்த தெரிந்தவர்களிடம் நிஜ வாழ்க்கையை அனுசரித்து வாழ தவறி விடுகிறார்கள்.

அந்த வரிசையில், சீரியல் நடிகர் விஷ்ணுகாந்த் – நடிகை சம்யுக்தா ஜோடி இணைந்துள்ளது. விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘சிப்பிக்குள் முத்து’ சீரியலில் நடித்த விஷ்ணு காந்த் மற்றும் சம்யுக்தா இருவரும் காதலித்து கடந்த மார்ச் மாதம் திருமணம் செய்துக் கொண்டனர். திருமணம் முடிந்த ஒரு மாதம் கூட இருவரும் ஒன்றாக வாழவில்லை.

இவருக்கு மனக்கசப்பு ஏற்பட்டு பிரிய முடிவெடுத்ததோடு சோஷியல் மீடியாக்களில் ஒருவரை இருவர் மாறி மாறி மோசமாக , கீழ்த்தரமான வார்த்தைகளால் குற்றம் சாட்டினர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அண்மையில் உடலுறவு விஷயத்தில் என்னை உடலளவிலும் மனதளவிலும் பாடாய்படுத்தி விட்டார். ஆபாச வீடியோக்களை பார்த்து அந்த மாதிரி பண்ண வேண்டும் என கட்டாயப்படுத்துவார். அதற்கு நான் சம்மதிக்காததால் அப்போ நாம பண்ணுறதை வீடியோவாக எடுத்து வைத்துக் கொண்டு அதை பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று கூறுவார்.

அதுமட்டும் அல்லாமல் உடலுறவு நேரத்தில் என்னை அடித்து இருக்கிறார். நான் வலியில் கத்தினால் கூட என்னுடைய வாயை பொத்திக்கொண்டு என்னுடைய கஷ்டத்தை புரிந்து கொள்ளாமல் அவருடைய சந்தோஷத்தை மட்டும் தான் அனுபவித்துக் கொண்டிருப்பார். எனக்கு பிறப்புறுப்பில் அலர்ஜி ஏற்பட்டு மருத்துவமனைக்கு சென்று வந்திருந்தோம். அன்றைய நாளில் கூட என்னை விடாமல் வேற மாதிரி ட்ரை பண்ணுவோம் என்று தொந்தரவு செய்தார்.என்னை ஒரு மனைவியாகவே பார்க்கவில்லை என குற்றம் சாட்டினார்.

இந்நிலையில் தற்போது லைவ் வீடியோவில் அவர் பேசியதை நெட்டிசன்ஸ் பங்கமாக ட்ரோல் செய்து வருகிறார்கள். அதாவது விஷ்ணுகாந்தத் திருமணம் செய்த ஒரு மாசத்தில் பணத்திற்கு மிகவும் கஷ்டமாக இருந்தது என்றும் மளிகை சாமான் வாங்க கூட போதிய காசு இல்லை என குழந்தைத்தனமாக குறை கூறியுள்ளார்.

அதெல்லாம் தான் எங்களுக்குள் பிரிவு வர காரணம் என பேசியுள்ளார். இந்த வீடியோவுக்கு குடும்ப பெண்கள் சிலர் மளிகை சாமான் இல்லைன்னு டைவர்ஸ் பண்ணிட்டா எல்லா பெண்களும் வாழ்க்கையை தூக்கி எறியவேண்டுயது தான். நாங்கள் எல்லாம் குழந்தைகளுக்கும் கணவருக்கும் சாப்பாடு போட்டு எங்களுக்கு சாப்பாடு இல்லாமல் பட்னியா இருந்து இருக்கோம். இதெல்லாம் வலுவான காரணம் இல்லை. சம்திங் ராங் என கமெண்ட்ஸ் செய்து ட்ரோல் செய்துள்ளனர்.

Views: - 573

8

14