சினிமா / TV

பணத்தாசை பிடித்த இளையராஜா! இனிமே இப்படி சொல்வீங்க? நாட்டுக்காக ராஜா செய்த தரமான சம்பவம்…

பணத்தாசை பிடித்த இளையராஜா!

தனது அனுமதி இல்லாமல் தனது பாடல்களை திரைப்படங்களில் பயன்படுத்தினால் நஷ்டஈடு கேட்பது இளையராஜாவின் வழக்கம். இது அவரின் உரிமைதான் என்றாலும் இது குறித்து அவரை விமர்சிப்பவர்கள் பலர் உண்டு. சமீபத்தில் வெளியான “குட் பேட் அக்லி” திரைப்படத்தில் அவரது பாடல்கள் இடம்பெற்றிருந்தன. இந்த நிலையில் தனது அனுமதி இல்லாமல் தனது பாடல்களை பயன்படுத்தியதாக கூறி இளையராஜா ரூ.5 கோடி நஷ்டஈடு கேட்டிருந்தார். 

இந்த விவகாரத்தில் பலரும் அவரை “பணத்தாசை பிடித்தவர்” என கடுமையாக விமர்சித்து வந்தனர். இந்த நிலையில் தற்போது இந்தியா பாகிஸ்தானுடன் போரில் ஈடுபட்டு வரும் சமயத்தில் இளையராஜா செய்துள்ள காரியம் பலரையும் நெகிழ்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. 

நாட்டுக்காக நிதி…

அதாவது இளையராஜா தனது இசை நிகழ்ச்சிகளின் மூலம் கிடைத்த வருவாயையும் மாநிலங்களவை உறுப்பினராக இருப்பதன் மூலம் கிடைத்த ஒரு மாத ஊதியத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருவதாக கூறியுள்ளார். 

இது குறித்த தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ள அவர், “வீரம் மிக்க முயற்சிகளால் நமது நாட்டின் துணிச்சலான ஹீரோக்கள் பயங்கரவாதத்தை அழித்தொழிக்கவும் நமது எல்லைகளையும் மக்களையும் காக்கவும் ஒரு பெருமைமிக்க இந்தியனாக மற்றும் மாநிலங்களவை உறுப்பினராக எனது இசை நிகழ்ச்சியின் மூலம் கிடைத்த வருவாயையும் ஒரு மாத ஊதியத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு அளிக்க முடிவு செய்துள்ளேன். ஜெய் ஹிந்த்” என பகிர்ந்துள்ளார். இளையராஜாவின் செயல் இந்தியர்கள் பலரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.  

Arun Prasad

Recent Posts

பிரம்மாண்ட படத்துடன் சினிமாவுக்கு Bye Bye சொல்லும் ராஜமௌலி? அதிர்ச்சியில் திரையுலகம்…

இந்தியாவின் டாப் இயக்குனர் “பாகுபலி” என்ற பிரம்மாண்ட திரைப்படத்தின் மூலம் தென்னிந்திய சினிமாவை திரும்பி பார்க்க வைத்தவர் ராஜமௌலி. அதுவரையில்…

43 minutes ago

விஜய் படத்தை டைரக்ட் பண்ணாலே இப்படித்தான்! ஹெச்.வினோத்தின் நிலைமையை பாருங்க?

கடைசி திரைப்படம் விஜய்யின் கடைசித் திரைப்படமான “ஜனநாயகன்” திரைப்படத்தை ஹெச்.வினோத் இயக்கி வருகிறார். இத்திரைப்படத்தை கேவிஎன் புரொடக்சன்ஸ் நிறுவனம் தயாரித்து…

1 hour ago

மதத்தின் பெயரால் வெறுப்பு அரசியல் கூடாது : திருமாவளவன் வேண்டுகோள்..!

விசிக கட்சி திருச்சியில் மே-31 நடத்த உள்ள "மதசார்பின்மை காப்போம்" என்ற பேரணி குறித்து வேலூர்,88o திருப்பத்தூர், ராணிப்பேட்டை,9 திருவண்ணாமலை…

2 hours ago

இந்தியா – பாக் போர் நிறுத்தம்.. சமாதானம் செய்த அமெரிக்கா : பேச்சுவார்த்தை தொடரும்..!

பகல்காம் தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தானுக்கு இந்தியா பதிலடி கொடுத்தது. ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் இந்தியா, பாகிஸ்தானில் உள்ள 9…

3 hours ago

ச்சீ…உங்களுக்குலாம் வெக்கமே இல்லையா? பாஜகவை கண்டபடி பேசும் பிரகாஷ் ராஜ்? என்னவா இருக்கும்?

அரசியல்வாதி பிரகாஷ் ராஜ் பிரகாஷ் ராஜ் சமீப காலமாகவே பாஜவை விமர்சித்தே பேசி வருகிறார். கடந்த 2019 ஆம் ஆண்டு…

3 hours ago

மீண்டும் தொடங்கும் ஐபிஎல்… சென்னையில் மட்டும் இத்தனை போட்டிகளா? வெளியான தகவல்!

இந்தியா - பாகிஸ்தான் போர் பதற்றம் காரணமாக ஐபிஎல் போட்டிகள் நிறுத்தப்படடன. கடந்த மார்ச் 22ஆம் தேதி தொடங்கிய ஐபிஎல்…

4 hours ago

This website uses cookies.