தனது அனுமதி இல்லாமல் தனது பாடல்களை திரைப்படங்களில் பயன்படுத்தினால் நஷ்டஈடு கேட்பது இளையராஜாவின் வழக்கம். இது அவரின் உரிமைதான் என்றாலும் இது குறித்து அவரை விமர்சிப்பவர்கள் பலர் உண்டு. சமீபத்தில் வெளியான “குட் பேட் அக்லி” திரைப்படத்தில் அவரது பாடல்கள் இடம்பெற்றிருந்தன. இந்த நிலையில் தனது அனுமதி இல்லாமல் தனது பாடல்களை பயன்படுத்தியதாக கூறி இளையராஜா ரூ.5 கோடி நஷ்டஈடு கேட்டிருந்தார்.
இந்த விவகாரத்தில் பலரும் அவரை “பணத்தாசை பிடித்தவர்” என கடுமையாக விமர்சித்து வந்தனர். இந்த நிலையில் தற்போது இந்தியா பாகிஸ்தானுடன் போரில் ஈடுபட்டு வரும் சமயத்தில் இளையராஜா செய்துள்ள காரியம் பலரையும் நெகிழ்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.
அதாவது இளையராஜா தனது இசை நிகழ்ச்சிகளின் மூலம் கிடைத்த வருவாயையும் மாநிலங்களவை உறுப்பினராக இருப்பதன் மூலம் கிடைத்த ஒரு மாத ஊதியத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருவதாக கூறியுள்ளார்.
இது குறித்த தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ள அவர், “வீரம் மிக்க முயற்சிகளால் நமது நாட்டின் துணிச்சலான ஹீரோக்கள் பயங்கரவாதத்தை அழித்தொழிக்கவும் நமது எல்லைகளையும் மக்களையும் காக்கவும் ஒரு பெருமைமிக்க இந்தியனாக மற்றும் மாநிலங்களவை உறுப்பினராக எனது இசை நிகழ்ச்சியின் மூலம் கிடைத்த வருவாயையும் ஒரு மாத ஊதியத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு அளிக்க முடிவு செய்துள்ளேன். ஜெய் ஹிந்த்” என பகிர்ந்துள்ளார். இளையராஜாவின் செயல் இந்தியர்கள் பலரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
மீண்டும் இணையும் அஜித்-ஆதிக் கூட்டணி? “குட் பேட் அக்லி” திரைப்படத்தை தொடர்ந்து அஜித்குமார் மீண்டும் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிக்கவுள்ளதாக…
பாரதிய ஜனதா கட்சியின் மகளிர் அணி சார்பில் மாதிரி மகளிர் பாராளுமன்ற கருத்தரங்கம் சேலத்தில் இன்று நடைபெற்றது அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டதன்…
வெற்றிமாறன்-சிம்பு கூட்டணி வெற்றிமாறன் இயக்கத்தில் சிலம்பரசன் நடிக்கும் திரைப்படத்தின் படப்பிடிப்பு மிக விரைவில் தொடங்கப்பட உள்ளது.“வடசென்னை” படத்தில் இடம்பெற்ற சில…
காக்கா-கழுகு கதை “வாரிசு” திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் சரத்குமார், “விஜய்தான் அடுத்த சூப்பர் ஸ்டார்” என்று கூறியது ரஜினிகாந்த்…
சிவகங்கை மாவட்டம் மடப்புரம் கோயில் காவலாளி மரண விவகாரம் தொடர்பான வழக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நீதிபதிகள் எஸ். எம்.…
திருப்பூரில் அஃகேனம் பட முன்னோட்ட நிகழ்ச்சி. நடிகர் அருண் பாண்டியன், கீர்த்தி பாண்டியன் செய்தியாளர் சந்திப்பு நிகழ்ச்சி ஸ்ரீசக்தி திரையரங்கில்…
This website uses cookies.