சினிமா / TV

விமான விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இளையராஜா இதனை செய்வாரா? திடீர் கேள்வி கேட்ட ரசிகர்!

கோர விபத்து

குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் அமைந்துள்ள சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து ஏர் இந்தியா AI171 போயிங் விமானம், நேற்று மதியம் 1.38 மணியளவில் லண்டனுக்கு கிளம்பியது. இவ்விமானம் புறப்பட்ட 5 நிமிடங்களில் தனது கட்டுப்பாட்டை இழந்து விமான நிலையத்திற்கு அருகே இருந்த ஒரு மருத்துவர் விடுதி மீது விழுந்தது. 

இந்த விபத்தில் இவ்விமானத்தில் பயணித்த 242 பேரில் 241 பேர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் விஷ்வாஸ் குமார் ரமேஷ் என்ற 40 வயது மதிக்கத்தக்க ஒரே ஒரு நபர் மட்டும் உயிர் தப்பினார். இந்த விபத்து நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இவ்விமானத்தில் உள்ள கருப்பு பெட்டியை தேடும் பணிகள் தீவிரமடைந்துள்ளது.

விமான விபத்து நடந்த பகுதியை இன்று காலை பிரதமர் மோடி பார்வையிட்டார். விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.1 கோடி வழங்கப்படும் என ஏர் இந்தியா உரிமையினரான டாடா நிறுவனம் அறிவித்துள்ளது. 

இளையராஜா இரங்கல்

இந்த கோர விபத்தில் பலர் பலியான நிலையில் பல பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் இசைஞானி இளையராஜா தனது எக்ஸ் தளத்தில், “அகமதாபாத்தில் நடந்த கோர சம்பவம் என்னை அதிர்ச்சியிலும் சோகத்திலும் ஆழ்த்தியுள்ளது. இந்த விபத்தில் தங்களது அன்புக்குரியவர்களை இழந்த குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். இறந்தவர்களின் ஆன்மா சாந்தியடையட்டும். இந்த கோர சம்பவத்தால் பாதிப்புக்குள்ளான ஒவ்வொரு நபருக்காகவும் நான் பிரார்த்தித்துக்கொள்கிறேன்” என இரங்கல் தெரிவித்துள்ளார். 

இளையராஜா இரங்கல் தெரிவித்துள்ள எக்ஸ் பதிவில் ரசிகர் ஒருவர், “விபத்தில் இறந்தவர்களுக்காக நீங்கள் திருவண்ணாமலையில் மோட்ச தீபம் ஏற்றுவீர்கள் என நம்புகிறேன்” என கூறியுள்ளார்.

Arun Prasad

Recent Posts

அண்ணனுக்கு 30 லட்சம் Bill-அ போடு- விக்ரம் படத்தின் பாடலால் தயாரிப்பாளருக்கு  வந்த வினை!

ஒரு பாட்டு வச்சது குத்தமா? சீயான் விக்ரம் நடிப்பில் கடந்த மார்ச் மாதம் வெளியான “வீர தீர சூரன் பார்ட்…

1 hour ago

திமுகவில் இருந்து விலகுகிறதா முக்கிய கட்சி? தவெகவுடன் இணைய 3 கட்சிகள் பேச்சுவார்த்தை?!!

அடுத்த ஆண்டு தமிழக சட்டப்பேரவை நடைபெற உள்ள நிலையில் தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தீவிரமாக தேர்தல் பணிகளை முடக்கி…

1 hour ago

துரை தயாநிதி வழக்கில் கோர்ட் செக்? அமலாக்கத்துறைக்கு பச்சைக்கொடி!

மதுரை மாவட்டம் மேலூர் கீழவளவு பகுதியில் அரசுக்குச் சொந்தமான இடத்தில் சட்டவிரோதமாக கிரானைட் கற்கள் எடுத்து அரசுக்கு ரூ.259 கோடி…

2 hours ago

படம் வெளியாகி அரை மணி நேரத்துல ட்ரோல்; எல்லாமே அரசியல்- தக் லைஃப்க்கு முட்டுக்கொடுக்கும் பிரபலம்?

எங்கு திரும்பினாலும் டிரோல் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு, திரிஷா, அபிராமி, ஐஸ்வர்யா லட்சுமி, அசோக் செல்வன் உள்ளிட்ட பலரது…

2 hours ago

மணிரத்னம் இதை மட்டும் பண்ணிருந்தார்னா?- பாட்டு பாடி ரிவ்யூ வீடியோ வெளியிட்ட மன்சூர் அலிகான்

தோல்வி திரைப்படம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு, திரிஷா, அபிராமி, அசோக் செல்வன், ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட பலரது நடிப்பில்…

4 hours ago

அடுக்கடுக்காக சொன்ன அண்ணாமலையால் நிரூபிக்க முடியுமா? திருமாவளவன் சவால்..!!

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரும், சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவன் திருச்சி சுற்றுலா மாளிகையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார் அப்போது அவர்…

4 hours ago

This website uses cookies.