ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்த “குட் பேட் அக்லி” திரைப்படத்தில் பல காட்சிகளில் தமிழ் சினிமாவின் கிளாசிக் பாடல்கள் பல பின்னணியில் ஒலித்தன. அதில் இளையராஜா இசையமைத்த “ஒத்த ரூபா தாரேன்”, “என் ஜோடி மஞ்சக்குருவி”, “இளமை இதோ இதோ” ஆகிய பாடல்களும் இடம்பிடித்திருந்தன.
இந்த நிலையில்தான் தன்னுடைய பாடல்களை தனது அனுமதி இல்லாமல் பயன்படுத்தியதாக இளையராஜா ரூ.5 கோடி இழப்பீடு கேட்டு “குட் பேட் அக்லி” திரைப்படத்தின் தயாரிப்பாளருக்கு நோட்டீஸ் அனுப்பினார். இச்செய்தியால் இளையராஜாவை அஜித் ரசிகர்கள் பலரும் கடுமையாக விமர்சித்து வந்தனர்.
அதனை தொடர்ந்து இளையராஜாவின் சகோதரரான கங்கை அமரன், ஒரு விழாவில் பேசியபோது, “எனது அண்ணனின் பாடலுக்குதானே கைத்தட்டுகிறார்கள். அப்படி என்றால் அவருக்குரிய உரிமையை கேட்பதில் என்ன தவறு?” என்று கேட்டிருந்தார்.
இந்த நிலையில் சமீபத்தில் பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டியளித்த கெத்து தினேஷ், “இசையமைப்பாளரை நாம் எப்போதும் கௌரவிக்க வேண்டும். ராஜா சார் கேட்பது தார்மீகமான தர்மமான ஒரு விஷயம்தான். அவர் கேட்காமலே நாம் தரவேண்டும். அவர் கேட்கிற மாதிரி நாம் வைத்துக்கொள்ளக்கூடாது” என கூறினார். கெத்து தினேஷ் இவ்வாறு பேசியது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
நேஷனல் கிரஷ் இந்திய இளைஞர்களின் மத்தியில் நேஷனல் கிரஷ்ஷாக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா. இவரின் கியூட்டான ரியாக்சன்களுக்காகவே இவரை…
பத்ம பூஷன் அஜித்குமார் நேற்று ஜனாதிபதியின் கைகளால் இந்தியாவின் உயரிய விருதான பத்ம பூஷன் விருதை பெற்றார் அஜித்குமார். தனது…
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது X தளப்பதிவில், கள்ளச்சாராய ஆட்சிக்கு! கள்ளக்குறிச்சியே சாட்சி! சட்டம் ஒழுங்கு சீர்கேட்டிற்கு மாணவர்கள்…
STR 49 மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசனுடன் சிம்பு இணைந்து நடித்த “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் 5 ஆம்…
நடிகர் அஜித்குமாருக்கு நேற்று பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது. இது அஜித ரசிகர்கள் மட்டுமல்லாமல் உலகளவில் உள்ள தமிழர்களுக்கு பெருமை…
தமிழ் சினிமாவில் கதநாயாகியாக நடித்து பின்னர் வாய்ப்பு இல்லாமல் குடும்பம், குழந்தை என செட்டில் ஆன நடிகைதான் கஸ்தூரி. திருமணத்திற்கு…
This website uses cookies.