சினிமா / TV

அம்மன் கோவிலுக்கு இவ்வளவு விலை உயர்ந்த காணிக்கையா? பக்தியிலும் அசத்திய இளையராஜா!

தாய் மூகாம்பிகையின் பக்தர்

இசைஞானிஇளையராஜா தாய் மூகாம்பிகையின் தீவிர பக்தர் என்பதை நாம் அறிவோம். அவர் பாடிய “ஜனனி ஜனனி” என்ற பாடல் மிகவும் பக்தி நயம் சொட்ட சொட்ட பாடிய பாடலாகும். இளையராஜா அவ்வப்போது தாய் மூகாம்பிகையை தரிசனம் செய்ய செல்வதுண்டு. அந்த வகையில் கர்நாடகா மாநிலம் கொல்லூரில் அமைந்துள்ள மூகாம்பிகை தேவி கோவிலுக்கு தரிசிக்க சென்ற இளையராஜா மிகவும் விலை உயர்ந்த காணிக்கையை வழங்கியுள்ளார். 

எட்டு கோடி ரூபாய் மதிப்புள்ள காணிக்கைகள்

இளையராஜா தனது சினிமா கெரியரில் 50 ஆண்டுகளை நிறைவு செய்ததை ஒட்டி கொல்லூர் மூகாம்பிகை தேவிக்கும் வீரபத்ர சுவாமிக்கும் எட்டு கோடி ரூபாய் மதிப்பிலான வைர கிரீடம், வைர மாலை மற்றும் தங்க வாள் போன்றவற்றை காணிக்கையாக செலுத்தினார். இளையராஜா மூகாம்பிகை தேவி கோவிலுக்கு காணிக்கை செலுத்திய புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன. 

இளையராஜாவின் பொன் விழா ஆண்டிற்கான பாராட்டு விழாவை நடத்த  தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. வருகிற செப்டம்பர் 13 ஆம் தேதி மாலை 5.30 மணிக்கு சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் இவ்விழா நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது. இதில் ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட பல சினிமா பிரபலங்கள் கலந்துகொள்ள உள்ளனர். 

Arun Prasad

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

1 week ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

1 week ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

1 week ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

1 week ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

1 week ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.