கிராம பாங்கான கதாபாத்திரங்களுக்கு பக்காவாக பொருந்துபவர் நடிகர் ராஜ் கிரண் இவர் இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள கீழக்கரையில் பிறந்து தமிழ் சினிமாவின் நடிகர் , இயக்குனர் , தயாரிப்பாளர் என பன்முகம் கொண்டு சிறந்து விளங்கி வருகிறார். மிகவும் எதார்த்தமான நடிப்பால் அனைவரையும் கவர்ந்த இவர் குறிப்பாக கிராமத்து ரசிகர்களை குறிவைத்து நடித்து அவர்களின் தீவிர ரசிகர் ஆனார்.
தமிழில் 25க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள இவர் சில திரைப்படங்களை தயாரித்தும் இயக்கியும் உள்ளார். தான் மட்டும் வளர்ந்தால் போதும் என்ற எண்ணம் கொண்ட நடிகர்களுக்கு மாறான ராஜ்கிரண் நிறைய புதுமுக நடிகர்களை அறிமுகம் செய்துள்ளாார். பல வெற்றி படங்களை கொடுத்து ராஜ்கிரண் தற்போது சில படங்களில் குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
ராஜ் கிரண் குறித்து ஒரு சுவாரசியமான சம்பவம் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது. அதாவது, ராஜ் கிரண் தயாரித்த ஒரு படத்திற்கு இளையராஜா இசையமைத்தால் நன்றாக இருக்கும் என்று அவர் வீட்டு வாசலில் நின்று இருக்கிறார். அப்போது, இளையராஜா நீ யாருன்னு தெரியாது உன் படத்துக்கு எல்லாம் மியூசிக் போட முடியாது என்று கடுப்புடன் கூறியிருக்கிறாராம்.
அதன் பின்னர், கவிஞர் வாலி இளையராஜாவிடம் ஒரு முறை போய் படத்தைப் பாரேன். அவன் தான் மறுபடியும் மறுபடியும் வரான்ல என்று கூறியதும் படத்தை பார்க்கிறார் இளையராஜா. பின்னர், அந்த படத்தை பார்த்து அசந்து போன இளையராஜா இந்த படத்தை நானே தயாரிக்கிறேன் என்றும், நானே வந்த விலைக்கு வாங்கிக்கிறேன் என்றும் சொல்லி இருக்கிறார். பாதி படத்தை இளையராஜாவும், மீதி பாதி படத்தை ராஜ்கிரனும் தயாரித்தார்களாம். இப்படத்தை இயக்கியது கஸ்தூரிராஜா என்று பெயர்தான் போடப்பட்டது. ஆனால், இயக்கியது ராஜ்கிரண் தானாம். அப்படத்தின் பெயர் தான் என் ராசாவின் மனசிலே.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.