இனிமையான இசைக்கு சொந்தக்காரரும் தன் இடத்தை யாராலும் கனவில் கூட பிடிக்கமுடியாத அளவுக்கு நுனி உச்சத்தை தொட்டிருப்பவர் இசைஞானி இளையராஜா. இவர் அவ்வப்போது சர்ச்சைகளில் சிக்கி விமர்சிக்கப்படுவது வழக்கமான ஒன்று.
அந்தவகையில் வெற்றிமாறனின் விடுதலை படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழாவில் கலந்துக்கொண்ட இளையராஜா மேடையில் வெற்றிமாறன் குறித்து பெருமையாக பேசினார். அதாவது, வெற்றிமாறனின் ஒவ்வொரு திரைக்கதையும் வெவ்வேறு அலைகளைக் கொண்டது.
தமிழ் சினிமாவிற்கு வெற்றிமாறன் மிக முக்கியமான இயக்குனர். இதை நான் 1500 படங்களை முடித்த பின்னர் சொல்கிறேன் என பேசிக்கொண்டிருக்கும்போது ரசிகர்கள் ஆரவாரம் செய்து கூச்சலிட்டனர்.
இதனால் பேசமுடியாமல் கோபப்பட்ட அவர், மைக்கை கொடுத்துவிட்டு நான் பாட்டுக்கு போயிடுவேன் என்று டென்ஷனாக பேசி இருக்கிறார். அதன் பின்னர் ரசிகர்கள் சத்தம் அடங்க மீண்டும் பேசத்தொடங்கியிருக்கிறார். இது சமூகவலைத்தளங்களில் வெளியாகி விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.
ரசிகர்கள் என்பதற்கு அர்த்தமே அது தானே? ரசனை தெரியாத ஆளா இருக்காரே நம்ம ராஜா என நெட்டிசன்ஸ் அவரை விமர்சித்துள்ளனர். ரசிகர்கள் இல்லை என்றால் இன்று உங்களுக்கு இப்படி ஒரு அடையாளமே இருந்திருக்காது யோசித்து பேசுங்கள் ஐயா என்கிறார்கள் அவரது ரசிகர்கள்.
2012 ஆம் ஆண்டு நித்யானந்தா மதுரை ஆதீனத்தின் இளைய ஆதீனமாக நியமனம் செய்யப்பட்டார். இந்த நியமனத்தை எதிர்த்து ஆதீன மடத்தின்…
ஆமிர்கான் நடிப்பில் ஆர் எஸ் பிரசன்னா இயக்கத்தில் உருவாகியுள்ள “சித்தாரேஜமீன் பர்” என்ற திரைப்படம் நாளை (ஜூன் 20) திரையரங்குகளில்…
டில்லியில் நடந்த ஒரு புத்தக திருவிழாவில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியுள்ளது தற்போது இணையத்தில் விவாதங்களை கிளப்பியுள்ளது. அவ்விழாவில்…
தக் லைஃப் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய கமல்ஹாசன், தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது என கூறியது சர்ச்சையை…
சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலரது நடிப்பில் நாளை ஜூன் 20 உலகம் முழுவதும்…
“எனக்கு மட்டும் அதிகாரம் இருந்தால் 24 மணிநேரமும் டாஸ்மாக்கை திறந்து வைப்பேன்” என ஒரு மேடையில் பேசியுள்ளார் திமுக முன்னாள்…
This website uses cookies.