இனிமையான இசைக்கு சொந்தக்காரரும் தன் இடத்தை யாராலும் கனவில் கூட பிடிக்கமுடியாத அளவுக்கு நுனி உச்சத்தை தொட்டிருப்பவர் இசைஞானி இளையராஜா. இவர் அவ்வப்போது சர்ச்சைகளில் சிக்கி விமர்சிக்கப்படுவது வழக்கமான ஒன்று.
அந்தவகையில் வெற்றிமாறனின் விடுதலை படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழாவில் கலந்துக்கொண்ட இளையராஜா மேடையில் வெற்றிமாறன் குறித்து பெருமையாக பேசினார். அதாவது, வெற்றிமாறனின் ஒவ்வொரு திரைக்கதையும் வெவ்வேறு அலைகளைக் கொண்டது.
தமிழ் சினிமாவிற்கு வெற்றிமாறன் மிக முக்கியமான இயக்குனர். இதை நான் 1500 படங்களை முடித்த பின்னர் சொல்கிறேன் என பேசிக்கொண்டிருக்கும்போது ரசிகர்கள் ஆரவாரம் செய்து கூச்சலிட்டனர்.
இதனால் பேசமுடியாமல் கோபப்பட்ட அவர், மைக்கை கொடுத்துவிட்டு நான் பாட்டுக்கு போயிடுவேன் என்று டென்ஷனாக பேசி இருக்கிறார். அதன் பின்னர் ரசிகர்கள் சத்தம் அடங்க மீண்டும் பேசத்தொடங்கியிருக்கிறார். இது சமூகவலைத்தளங்களில் வெளியாகி விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.
ரசிகர்கள் என்பதற்கு அர்த்தமே அது தானே? ரசனை தெரியாத ஆளா இருக்காரே நம்ம ராஜா என நெட்டிசன்ஸ் அவரை விமர்சித்துள்ளனர். ரசிகர்கள் இல்லை என்றால் இன்று உங்களுக்கு இப்படி ஒரு அடையாளமே இருந்திருக்காது யோசித்து பேசுங்கள் ஐயா என்கிறார்கள் அவரது ரசிகர்கள்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.