அவருக்கு அடிமையாக இருக்கனும் ஆனால், அவரை விட பெருசா வளர கூடாது – இளையராஜா குறித்து கங்கையமரன்!

தமிழ் சினிமாவின் தலைமுறைக்கும் பேசும், பேசப்போகும் இசை அரசனாக பார்க்கப்படுபவர் இசைஞானி இளையராஜா. இவர் அன்னக்கிளி என்ற திரைப்படத்துக்கு இசை அமைத்ததன் மூலம் 1976 இல் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார். தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் போன்ற மொழிகளில் 1000த்துக்கும் மேற்பட்ட பாடல்களை பாடியிருக்கிறார். சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதை நான்கு முறை பெற்றுள்ளார். தமிழின் நாட்டுப்புற இசையினை அதன் தரம் குன்றாமல் வழங்குவதில் அவர் ஞானி.

இனிமையான பாடலுக்கு கோடிக்கணக்கான ரசிகர்களை தன்வசப்படுத்துயிருக்கும் இளையராஜா பேச ஆரம்பித்தாள் எல்லோரும் முகம் சுளிக்கப்படி அடுத்தவர்களை பற்றி மோசமாக மரியாதை இல்லாமல் இழிவாக நடந்துக்கொள்வார். சமீப காலங்களில் அதிக சர்ச்சைகளில் இசைஞானி சிக்கி வருகிறார். இளையராஜா எப்படிப்பட்டவர் என யாரை கேட்டாலும்? அவரது இசையை தவிர வேறு எதையும் கேட்காதீங்க என கூறிவிடுவார்கள். அவ்வளவு மோசமாக பிறரிடம் நடந்துக்கொள்ளவார்.

இந்நிலையில் தற்போது இளையராஜாவின் தம்பி கங்கை அமரனின் வளர்ச்சிக்கு ஆரம்பத்தில் முட்டுக்கட்டை போட்டதை குறித்து அவர் பேட்டி ஒன்றில் பேசியுள்ளார். அதாவது, “என்னுடைய நண்பர் மலேசியா வாசுதேவன் கதையில் ஒரு படம் தயாராக இருந்தது. அந்த படத்தில் அவர்தான் கதாநாயகன். இசை யாரை போடலாம் என்று யோசித்து கொண்டிருந்தபோது இளையராஜா என்று பேசிட்டு கொண்டிருந்தார்கள்.

ஆனால், மலேசியா வாசுதேவன் இளையராஜா வேண்டாம். அவர் மிகவும் காஸ்ட்லி. அவர் போடும் டியூன் எல்லாம் கங்கை அமரன் தான் கொடுக்கிறார். அதனால் அவரைப் போடுவோம் என சொல்லி என்னை பிக்ஸ் பண்ணிட்டு என்னிடம் வந்து சொன்னார்கள். அப்போது நான் அண்ணன் இளையராஜாவிடம் வேலை செய்துக்கொண்டிருந்தேன்.

எனக்கு மியூசிக் பத்தி ஒன்னுமே தெரியாது என்று சொல்லியும் அதெல்லாம் பார்த்துக் கொள்ளலாம் வா என்று சொல்லி என்னை அழைத்துச் சென்றார்கள். அங்கே போயிட்டு பேசிட்டு அட்வான்ஸ் எல்லாம் வாங்கிட்டேன். இந்த விஷயம் மறுநாள் செய்தித்தாளில் எல்லாம் வந்துவிட்டது. இது என் அண்ணன் இளையராஜா பார்த்துவிட்டார். உடனே என்னை அழைத்து என்னடா இசையமைக்க போறியாமே? என்று கேட்டார். ஆமாம், அண்ணா இவங்கதான் கூட்டிட்டு போய் ஓகே பண்ணாங்க என பயந்தபடி கூறினேன்.

அவர் கோபத்துடன் உனக்கு ம்யூசிக் பற்றி என்னடா தெரியும்? கிட்டார் தூக்கிக்கிட்டு ஓடு என்று விரட்டி அடித்தார். நானும் உடனே அங்கிருந்து கிளம்பி விட்டேன். எந்த வாக்குவாதம் இளையராஜாவின் குரு ஜி கே வெங்கடேசனுக்கு தெரியவர, நீ என்கிட்ட வேலை செஞ்சிட்டு தனியா மியூசிக் பண்ண போனப்ப உன்னை என் குரூப்பை விட்டு விலக்கினேனா? இல்லைல அந்த படத்திற்கு வேறு யாராவது மியூசிக் பண்ண போறாங்க. அதற்கு அவன் பண்ணா என்ன என்று கேட்டவுடன் தான் அண்ணா ஒப்புக்கொண்டார். அதன்பிறகு அந்த படத்திற்கு நான் இசையமைத்தேன். படமும் நன்றாக ஓடி வெற்றி அடைந்தது என்று கூறினார். சொந்த தம்பியின் வளர்ச்சியையே இப்படி கெடுத்துள்ளாரா? இளையராஜா என ரசிகர்கள் வருத்தமடைந்துள்ளனர்.

Ramya Shree

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

2 weeks ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

3 weeks ago

This website uses cookies.