தமிழ் சினிமாவில் இசை ஜாம்பவானாகவும், இசைஞானியாகவும் திகழ்ந்து வருபவர் இளையராஜா. கடைசியாக இவர் விடுதலை படத்திற்கு இசை அமைத்திருக்கிறார். பல்லாயிரக்கணக்கான பாடல்களை கொடுத்த இளையராஜா புகழின் உச்சிக்கே சென்றாலும் சில வெறுப்புகளையும், சில சங்கடங்களையும் சந்தித்திருக்கிறார்.
ஒரு காலகட்டத்தில் இளையராஜாவின் கால்ஷீட்டுக்காக இயக்குனர்கள் பலர் வரிசையில் நிற்கும் நிலை இருந்துள்ளது, ஏன் இப்போதும் அது நடந்து தான் வருகிறது. அப்படித்தான் மனோபாலாவிற்கு இரங்கல் தெரிவித்த இளையராஜா மனோபாலா தனக்காக ரோட்டில் காத்திருந்தவர்களில் ஒருவர் என்று தெரிவித்திருந்தார்.
இதற்கு பலர் கடுமையாக விமர்சித்து வந்தனர். ஆனால் அப்போது மனோபாலா ரோட்டில் இளையராஜாவின் கண்படும்படி நின்று கொண்டிருந்ததாகவும், பாரதிராஜாவிடம் பணியாற்றும் நபர்களிடம் மரியாதை கொண்டவராக இளையராஜா திகழ்ந்து வந்ததாகவும், தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளது.
முன்னதாக பாரதிராஜாவிடம் பணியாற்றிய மனோபாலாவை இளையராஜா அங்கு நிற்பதை பார்த்து உடனே அவரை அழைத்து இருக்கிறார். அப்போது மனோபாலாவிடம் இளையராஜா நீங்களும் மற்றவர்களும் ஒன்றா எதற்காக இப்படி என் கண் படும்படி நிற்கிறீர்கள் இனிமேல் இப்படி செய்யாதீர்கள் என்று வார்னிங்கும் கொடுத்து அனுப்பியிருக்கிறார். இந்த சம்பவத்தை பிரபல பத்திரிகையாளர் செய்யாறு பாலு பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.