தமிழ் சினிமாவில் இசை ஜாம்பவானாகவும், இசைஞானியாகவும் திகழ்ந்து வருபவர் இளையராஜா. கடைசியாக இவர் விடுதலை படத்திற்கு இசை அமைத்திருக்கிறார். பல்லாயிரக்கணக்கான பாடல்களை கொடுத்த இளையராஜா புகழின் உச்சிக்கே சென்றாலும் சில வெறுப்புகளையும், சில சங்கடங்களையும் சந்தித்திருக்கிறார்.
ஒரு காலகட்டத்தில் இளையராஜாவின் கால்ஷீட்டுக்காக இயக்குனர்கள் பலர் வரிசையில் நிற்கும் நிலை இருந்துள்ளது, ஏன் இப்போதும் அது நடந்து தான் வருகிறது. அப்படித்தான் மனோபாலாவிற்கு இரங்கல் தெரிவித்த இளையராஜா மனோபாலா தனக்காக ரோட்டில் காத்திருந்தவர்களில் ஒருவர் என்று தெரிவித்திருந்தார்.
இதற்கு பலர் கடுமையாக விமர்சித்து வந்தனர். ஆனால் அப்போது மனோபாலா ரோட்டில் இளையராஜாவின் கண்படும்படி நின்று கொண்டிருந்ததாகவும், பாரதிராஜாவிடம் பணியாற்றும் நபர்களிடம் மரியாதை கொண்டவராக இளையராஜா திகழ்ந்து வந்ததாகவும், தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளது.
முன்னதாக பாரதிராஜாவிடம் பணியாற்றிய மனோபாலாவை இளையராஜா அங்கு நிற்பதை பார்த்து உடனே அவரை அழைத்து இருக்கிறார். அப்போது மனோபாலாவிடம் இளையராஜா நீங்களும் மற்றவர்களும் ஒன்றா எதற்காக இப்படி என் கண் படும்படி நிற்கிறீர்கள் இனிமேல் இப்படி செய்யாதீர்கள் என்று வார்னிங்கும் கொடுத்து அனுப்பியிருக்கிறார். இந்த சம்பவத்தை பிரபல பத்திரிகையாளர் செய்யாறு பாலு பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.