சினிமா / TV

மேடையில் கண்கலங்கிய இளையராஜா.. பவதாரிணி பெயரில் சிறுமிகள் ஆர்கெஸ்ட்ரா குழு!

பவதாரிணி நினைவாக, அவரது பெயரில் சிறுமிகள் (15 வயதுக்கு உட்பட்டவர்கள்) ஆர்கெஸ்ட்ரா குழு தொடங்கவுள்ளதாக இளையராஜா அறிவித்தார்.

சென்னை: மறைந்த பிரபல பின்னணி பாடகி பவதாரிணியின் பிறந்தநாள் மற்றும் திதியை முன்னிட்டு, சென்னை மியூசிக் அகாடமியில் நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட அவரது தந்தையும், இசையமைப்பாளருமான இளையராஜா, தனது மகளின் புகைப்படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

பின்னர், இளையராஜா, தனது இசையில் பவதாரிணி பாடிய “காற்றில் வரும் கீதமே..” என்ற பாடலைப் பாடி நெகிழ்ந்தார். மேலும், தனது தங்கை பவதாரிணி பிறந்தபோது அவரைக் கொஞ்சிய நினைவலைகளை, நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவரது சகோதரர் கார்த்திக் ராஜா கண் கலங்கியபடி பகிர்ந்தார்.

மேலும், கங்கை அமரன், வெங்கட் பிரபு உள்ளிட்டோரும் பவதாரிணி குறித்த நினைவுகளைப் பகிர்ந்து கொண்டனர். இதனையடுத்து, பவதாரிணி நினைவாக, அவரது பெயரில் சிறுமிகள் (15 வயதுக்கு உட்பட்டவர்கள்) ஆர்கெஸ்ட்ரா குழு தொடங்கவுள்ளதாக இளையராஜா அறிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில், இளையராஜாவின் குடும்பத்தினர் மட்டுமல்லாது, திரையுலகைச் சேர்ந்த பலரும் கலந்து கொண்டனர். தொடர்ந்து, பவதாரிணி கடைசியாக இசையமைத்த “புயலில் ஒரு தோணி” படத்தின் இசை வெளியீட்டு நிகழ்ச்சியும் அதே மேடையில் நடைபெற்றது.

இதையும் படிங்க: சாக்லேட் பாய் மாதவனின் ரசிகைகள் கவனத்திற்கு.. கோவையில் படமாகும் ஜி.டிநாயுடு பயோபிக்!

பவதாரிணி இறப்பு: பிரபல இசையமைப்பாளர் இளையராஜாவின் மகளான பவதாரிணி, கடந்த ஆண்டு ஜனவரி 25ஆம் தேதி, உடல்நலக் குறைவால் காலமானார். இலங்கையில் சிகிச்சையில் இருந்த பவதாரிணி அங்கு காலமானார். இதனால் அவரது உடல் இலங்கையில் இருந்து இந்தியாவுக்கு கொண்டுவரப்பட்டது.

இந்த நிலையில், அவர் மறைந்து ஒரு ஆண்டுக்கு மேல் ஆகிறது. அந்த வகையில், நேற்று பவதாரிணியின் பிறந்தநாள் என்பதால், அவரது சித்தப்பா மகனும், அண்ணனும் ஆன வெங்கட் பிரபு, தனது எக்ஸ் பக்கத்தில் பவதாரிணி புகைப்படத்தை பகிர்ந்து தனது நினைவுகளை பகிர்ந்து கொண்டுள்ளார்.

Hariharasudhan R

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

1 week ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

1 week ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

1 week ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

1 week ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

1 week ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.