தெலுங்கு, இந்தி திரைப்படங்களில் பிரபல நடிகையாக வலம் வருபவர் இலியானா டிகுரூஸ். தமிழில் சில படங்களில் அவர் நடித்திருந்தாலும், நடிகர் விஜய் நடித்த நண்பன் படம் அவருக்கு நல்லாவே கைகொடுத்தது. குறிப்பாக, அந்தப் படத்தில் இடம்பெற்றிருந்த ‘இருக்கானா இடுப்பிருக்கானா’ என்ற பாட்டுக்கு அவர் ஆடிய விதம் அனைவரையும் கவர்ந்தது. முன்னதாக தமிழில் ‘கேடி’ படத்தில் நடித்து அறிமுகம் ஆனார்.
சில ஆண்டுகளுக்கு முன்னர் ஆஸ்திரேலியாவை சேர்ந்த புகைப்பட கலைஞர் அன்ரூ என்பவரை காதலித்து அவருடன் லிவிங் டூ கெதர் வாழ்க்கையை வாழ்ந்து வந்தார். இருவரும் திருமணம் செய்துகொள்ளவிருந்த நேரத்தில் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்துவிட்டார்கள். இதையடுத்து, உடல் எடை கூடிய அவரது புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இருப்பினும், அடிக்கடி பிகினி ஆடையில் தோன்றி ரசிகர்களை குஷிப்படுத்தி வருவார்.
சமீபத்தில் திடீரென இன்ஸ்டாகிராமில் கர்ப்பமாக இருப்பதாக அறிவித்து அதிர்ச்சி கொடுத்தார். திருமணம் செய்யாமலே காதலன் யார் என்று அறிவிக்காமலே கர்ப்பமான செய்தி வெளியிட்டது பெரும் சர்ச்சைக்குள்ளானது. இந்நிலையில் தற்போது காதலருடன் எடுத்துக்கொண்ட பிளாக் அண்ட் வொய்ட் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு ஒரு நீண்ட நெகிழ்ச்சியான உருக்கமான பதிவினை போட்டுள்ளார்.
அதில், “ கர்ப்பமாக இருப்பது ஒரு அழகான ஆசீர்வாதம். இதனை அனுபவிக்கும் அளவுக்கு நான் அதிர்ஷ்டசாலி என்று நினைக்கவில்லை, எனவே இந்த பயணத்தில் நான் நம்பமுடியாத அதிர்ஷ்டசாலி என்று நினைக்கிறேன்
உங்களுக்குள் வளரும் ஒரு வாழ்க்கையை உணருவது எவ்வளவு இனிமையானது என்பதை என்னால் விவரிக்க முடியாது. பெரும்பான்மையான நாட்களில் நான் என்னுடைய வயிறை பார்த்துக்கொண்டு உற்சாகமடைந்து கொண்டிருக்கிறேன். விரைவில் உன்னை சந்திக்கிறேன்.
சில நாட்களில் இது விவரிக்க முடியாத அளவு கடினமாக இருக்கிறது. இருப்பினும் நான் முயற்சி செய்கிறேன். இதனை நான் மிகப்பெரிய விஷயமாக கருதுகிறேன். சில விஷயங்கள் நம்பிக்கையில்லாத உணர்வை கொடுக்கிறது. அங்கு கண்ணீர் இருக்கிறது. பின்னர் குற்ற உணர்வு தலைதூக்குகிறது. தலையில் உள்ள இந்த குரல் என்னை கீழே இழுக்கிறது.
நான் நன்றியுள்ளவளாக இருக்க வேண்டும், அற்பமான விஷயத்திற்காக அழக்கூடாது. நான் வலுவாக இருக்க வேண்டும்.எனக்கு வலிமை இல்லை என்றால் நான் எப்படிப்பட்ட தாயாக இருப்பேன். நான் எப்படிப்பட்ட தாயாக இருப்பேன் என்று எனக்குத் தெரியாது. எனக்குத் தெரிந்ததெல்லாம், நான் இந்த சிறிய மனிதனை மிகவும் நேசிக்கிறேன். அதனால் நான் வெடிக்கக்கூடிய அளவுக்கு ஏற்கனவே மிகவும் துணிந்துவிட்டேன். இப்போதைக்கு அது போதும் என்று நினைக்கிறேன்.
நான் என்னிடமே அன்பாக நடந்து கொள்ள மறக்கும் நாட்களில், இந்த அழகான மனிதன் வேறுவிதமாக நடந்துகொள்கிறான். நான் கோபமாக இருப்பதை அவர் உணரும்போது அவர் என்னைப் பிடிக்கிறார். என் கண்ணீர் துடைக்கப்படுகிறது. என்னை சிரிக்க வைப்பதற்காக முட்டாள்தனமான நகைச்சுவைகளை அரங்கேற்றுகிறார். அந்தத் தருணத்தில் எனக்கு அதுதான் தேவை என்று அவன் அறிந்ததும் கட்டிப்பிடிக்கிறார். இது எனக்கு கடினமாக இருக்க வில்லை.” என்று அவர் அதில் பதிவிட்டு இருக்கிறார்
தொடர்ந்து தோல்வி படங்கள்? கோலிவுட்டின் முன்னணி நடிகராக சீயான் விக்ரம் வலம் வந்தாலும் “தெய்வத்திருமகள்” திரைப்படத்திற்குப் பிறகு சொல்லிக்கொள்வது போல்…
கைமாறிய STR 49 சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை முதலில் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தில் சந்தானம் காமெடி…
பின்னர் முனைவர் வைகை செல்வன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி, திருச்சியில் திருமாவளன் அவர்களுடன் நிகழ்ந்த சந்திப்பை பற்றி கேள்வி எழுப்பிய…
மேலை நாடுகளில் மருத்துவ கல்வி பயில விரும்பும் மாணவர்களுக்கு தேவையான இலவச நீட் பயிற்சி, இலவச கணினி, புத்தகங்கள், மருத்துவ…
தூக்கத்தை கெடுத்த மதுபாலா பாலச்சந்தரின் “அழகன்” திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்தவர் மதுபாலா. அதனை தொடர்ந்து தமிழில் “ரோஜா”,…
பாமகவில் தற்போது தந்தை மகன் மோதல் முற்றியுள்ளது. பாமக நிறுவனர் ராமதாஸ், தனது மகன் அன்புமணி மீது ஏராளமான குற்றச்சாட்டை…
This website uses cookies.