தேனாண்டாள் முரளி தலைமையில் சமீபத்தில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தில் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக்குழு கூட்டத்தில் பல முக்கிய முடிவுகள் எடுத்திருப்பதாக தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளது.
இதில், படத்தில் நடிப்பதாக கூறிவிட்டு தயாரிப்பாளர்களிடம் பணத்தை வாங்கி நஷ்டத்தை ஏற்படுத்திக் கொடுத்த பல நடிகர், நடிகைகளுக்கு ரெட் கார்டு கொடுக்க இந்த கூட்டத்தில் முடிவு செய்துள்ளார்களாம்.
வேல்ஸ் ஃபிலிம்ஸ் நிறுவனம் சிம்பு மீது புகார் கொடுத்துள்ளதாம். தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வரும் தனுஷ் மீதும் புகார் பாய்ந்து உள்ளதாம். மேலும், இந்த லிஸ்டில் அமலபால், எஸ்.ஜே.சூர்யா, விஷால், யோகி பாபு மற்றும் அதர்வா போன்ற பல நட்சத்திரங்களின் பெயர்களும் இடம் பெற்றுள்ளதாக கோலிவுட்டில் முணுமுணுக்கப்பட்டு வந்தது.
முன்னதாக, நடிகர் வடிவேலு, சிம்பு உள்ளிட்ட பிரபலங்களுக்கு இப்படி ரெட் கார்டு போடப்பட்டு நடிக்க முடியாமல் இருந்து ஒரு சில இடைவெளிக்குப்பின் மீண்டும் நடிக்க தொடங்கினர்.
இப்படியான நிலையில், தற்போது நடிகர் தனுஷ், அமலாபால், ராய் லட்சுமி உள்ளிட்ட 14 பிரபலங்களுக்கு ரெட் கார்டு போட தயாரிப்பாளர் சங்கத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கோலிவுட்டில், பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.