பிரித்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் கடந்த மாதம் 27 ஆம் தேதி வெளியான “L2 எம்புரான்” திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் ரூ.100 கோடிக்கும் மேலாக வசூல் செய்துள்ளது. மிக விரைவிலேயே ரூ.250 கோடி வசூலை அடைந்துவிடும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இத்திரைப்படம் வெளிவந்தபோது இத்திரைப்படத்தில் இடம்பெற்ற சில காட்சிகள் ஒரு குறிப்பிட்ட மதத்தை இழிவுபடுத்துவதாக சர்ச்சைகள் கிளம்பின. இதனை தொடர்ந்து மோகன்லால் அக்காட்சிகள் எவரையும் புண்படுத்தியிருக்கும் பட்சத்தில் மன்னிப்பு கேட்பதாக ஒரு அறிக்கையை வெளியிட்டார். அதனை தொடர்ந்து திரைப்படத்தில் 24 இடங்களில் கட் செய்யப்பட்டது. மேலும் வில்லன் கதாபாத்திரத்தின் பெயரும் மாற்றப்பட்டது.
இவ்வாறு ஒரு வழியாக “எம்புரான்” திரைப்படம் சர்ச்சையில் இருந்து மெல்ல தன்னை விலக்கிக்கொண்டது. இந்த நிலையில் இத்திரைப்படத்தை இயக்கிய நடிகரும் இயக்குனருமான பிரித்விராஜ்ஜுக்கு வரிமானவரித்துறையினர் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.
“எம்புரான்” திரைப்படத்தின் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான கோகுலம் சினிமாஸ் சம்பந்தப்பட்ட நிறுவனங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினார்கள். இதனை தொடர்ந்து இன்று பிரித்விராஜ்ஜுக்கு வருமாவரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
பிரித்விராஜ் இதற்கு முன்பு நடித்து இணை தயாரிப்பாளராகவும் இருந்த “கடுவா”, “ஜன கண மன” “கோல்டு” போன்ற திரைப்படங்களுக்காக அவர் வாங்கிய ஊதியம் குறித்து வரிமானவரித்துறை விளக்கம் கேட்டுள்ளது. “எம்புரான்” திரைப்படத்திற்காக பிரித்விராஜ் ரூ.40 கோடி ஊதியமாக பெற்றுள்ளார்.
இச்செய்தி இணையத்தில் பரவ தமிழகத்தைச் சேர்ந்த பலரும், “உண்மையை பேசினால் இதுதான் கதி. இது எதிர்பார்த்த ஒன்றுதான்” என்று கருத்து தெரிவித்து வருகின்றனர். “எம்புரான்” திரைப்படத்தில் குஜராத் கலவரத்தை மையப்படுத்தி சில காட்சிகளும் ஒரு குறிப்பிட்ட இயக்கங்களுக்கு எதிரான காட்சிகளும் இடம்பெற்றிருந்ததாக கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ராஜலட்சுமி…
நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…
இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…
தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…
கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…
அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…
This website uses cookies.