நடிகை கனிகா தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்ட சமீபத்திய வீடியோ ஒன்று பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.
நாய்கள் மீது தனக்கு எப்போதும் தனி பாசம் உண்டு என்பதை தன்னைப் பின்தொடரும் ரசிகர்கள் நன்கு அறிவார்கள் என்று கூறிய கனிகா, தெருநாய்களுக்காக குரல் கொடுக்கும் வகையில் உருக்கமாக பேசியுள்ளார்.
டெல்லியில் நடக்கும் அநியாயத்தைப் பார்க்கும்போது மனசு வேதனையா இருக்கு. தெருவில் பிறந்து வளர்ந்த நாய்களை ஊருக்கு ஒதுக்குப்புறமா அடைச்சு வைக்கறது எந்த வகையில் நியாயம்? ஆயிரக்கணக்கான நாய்களை ஒரே இடத்தில் கொண்டு போய் அடைச்சு வைச்சு பாதுகாக்க முடியுமா? இது எவ்வளவு பெரிய பிரச்சனையை உருவாக்கும்? என்று கனிகா கேள்வி எழுப்பினார்.
மேலும், “நம்மை நாம பிறந்து வளர்ந்த இடத்தை விட்டு அப்புறப்படுத்தி, ஊருக்கு ஒதுக்குப்புறமா அடைச்சு வைச்சா, நாம அதை ஏத்துக்க முடியுமா? அதே மாதிரி தானே அந்த நாய்களுக்கும் கஷ்டமா இருக்கும்?” என்று அவர் உணர்ச்சி பொங்க பேசினார்.
நாய்கள் கடிக்கும் பிரச்சினை குறித்து பேசிய கனிகா, “நாய் கடிக்கறது உண்மையான பிரச்சினை தான். என் பையனை ஒரு நாய் கடிச்சா, நானும் அதை ஏத்துக்க முடியாது. ஆனா, ஒரு நாய் கடிச்சதுக்காக மொத்த நாய்களையும் அழிக்கணும்னு சொல்றது எப்படி நியாயமாகும்?” என்று கேள்வி எழுப்பினார்.
அதோடு நிற்காமல், சமூகத்தில் நடக்கும் மற்றொரு முக்கிய பிரச்சினையை ஒப்பிட்டு கனிகா கூறினார்: “நம்ம நாட்டில் பல கொடுமைகள் நடக்குது. குழந்தைகளை பாலியல் வன்கொடுமை செய்யறவங்க எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே இருக்கு.
ஒருத்தர் செய்யற தவறுக்காக மொத்த ஆண்களையும் தண்டிக்க முடியுமா? அது சரியா இருக்குமா?”கனிகாவைப் போலவே, நடிகை தமன்னா, நடிகர் விஜய் தேவரகொண்டா உள்ளிட்ட பல பிரபலங்களும் தெருநாய்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகின்றனர். இந்த விவகாரத்தில் மனிதாபிமானத்துடன் செயல்பட வேண்டிய அவசியத்தை இவர்கள் வலியுறுத்துகின்றனர்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.