சினிமா / TV

ஜனநாயகன் படத்துல நடிக்க கூப்பிட்டாங்க-உருட்டுனது போதும்! ட்ரோலில் சிக்கிய இன்ஸ்டா பிரபலம்!

டிரெண்டிங் இன்ஸ்டா பிரபலங்கள்

இன்ஸ்டாவில் ரீல்ஸ் செய்து பல பெண்கள் பிரபலம் ஆனது உண்டு. அந்த வரிசையில் இன்ஸ்டாவில் இடைவிடாது ரீல்ஸ் செய்து பிரபலமானவர்கள்தான் கனி, சக்தி ஆகிய இரு சகோதரிகளும். கனி மற்றும் சக்தி ஆகிய இருவரும் இணைந்து செய்யும் பல ரீல்கள் வைரலான நிலையில் இன்ஸ்டாவாசிகள் பலருக்கும் பரிச்சயமானவர்களாக ஆனார்கள். இவர்கள் தொடர்ந்து பல பேட்டிகளிலும் கலந்துகொண்டு வருகிறார்கள். இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்துகொண்டபோது கனி கூறிய ஒரு விஷயம்தான் தற்போது சமூக வலைத்தளங்களில் ட்ரோல் செய்யப்பட்டு வருகிறது. 

ஜனநாயகன் படத்துல நடிக்க கூப்பிட்டாங்க?

“தனுஷ் சார் படத்தில் என்னை நடிக்க அழைத்தார்கள். அது ஒரு சின்ன கதாபாத்திரம்தான். அதன் பின் சிவகார்த்திகேயன் படத்தில் என்னை நடிக்க அழைத்தார்கள். மேலும் தளபதி 69 படத்திலும் ஒரு சின்ன ரோலில் நடிக்க அழைத்தார்கள். ஆனால் நான் அதை எல்லாம் மறுத்துவிட்டேன். எனக்கு எதிலும் ஆர்வம் இல்லை. 

பார்ப்பவர்களுக்கு என்ன தோன்றும் என்றால், ஆமா இவள் பெரிய இவ, என்றுதான் சொல்ல தோன்றும், ஆனால் என்னுடைய இடத்தில் இருந்து பார்த்தால்தான் அதன் காரணம் புரியும். என்னுடைய அப்பாவிற்கு இது எல்லாம் பிடிக்காது. 

நாங்கள் ரீல்ஸ் போடத் துவங்கிய போது கூட அவரிடம் புரிய வைத்துதான் எல்லாம் செய்தோம். ஆதலால் அவர் சினிமாவிற்கெல்லாம் அனுமதித்திருக்க மாட்டார்” என கனி அப்பேட்டியில் கூறியிருந்தார். 

இப்பேட்டி இணையத்தில் வைரல் ஆன நிலையில், “ரீல் விடுறதுக்கும் ஒரு அளவு இருக்கு”, “உருட்டு உருட்டு” போன்ற கம்மண்ட்டுகளால் இணையவாசிகள் ட்ரோல் செய்து வருகின்றனர். 

Arun Prasad

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

2 weeks ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.