நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகளான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் நடிகர் தனுஷை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு யாத்ரா, லிங்கா என இரு மகன்கள் உள்ள நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக தனுஷ் – ஐஸ்வர்யா பிரிவதாக அறிவித்தனர்.
இவர்கள் விவாகரத்து வழக்கு 2 வருடமாக நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில் நாளை தீர்ப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் 20 வருடமாக அரசியல் வாரிசுடன் நெருக்கமாக இருப்பதாக ஐஸ்வர்யா ரஜினிகாந்த் கூறியுள்ளார். கலைஞர் கருணாநிதியின் மகளான கனிமொழியுடன் 20வருட நட்பு குறித்து ஐஸ்வர்யா மனம் திறந்து பேசியுள்ளார்.
கனிமொழியின் அரசியல் பயணத்தை போற்றும் விதமாக, ஒரு யூடியூப் சேனல் சிறப்பு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தது. அதில் சிறப்பு விருந்தினராக வந்திருந்த ஐஸ்வர்யா ரஜினிகாந்த், கனிமொழியுடன் தனது நீண்ட கால நட்பு பற்றிய விவரங்களை முதன்முறையாக பகிர்ந்தார்.
ஐஸ்வர்யா கூறியதாவது: “பொதுவாக நான் எந்த நிகழ்ச்சிகளுக்கும் செல்ல மாட்டேன். ஆனால், கனிமொழி அக்காவுக்காக நான் எங்கு வேண்டுமானாலும் சென்றுவிடுவேன். எங்களது நட்பு 20 ஆண்டுகளாக நீடிக்கிறது. இது வார்த்தைகளால் விவரிக்க முடியாத ஒரு உறவு.
இதையும் படியுங்க: நீயெல்லாம் Second Hand : சமந்தா மீது நெட்டிசன்கள் மோசமான விமர்சனம்..!!
நான் எப்போதும் சோர்வாக இருந்தால், முதலில் போன் செய்து பேசுவது அக்காவிடம்தான். அரசியல் மேடைகளிலும், நாடாளுமன்றத்திலும் அவர் பேசியதை பார்த்து பல முறை நான் திட்டியுள்ளேன். ‘இன்னும் நல்லா பேசனும்’ என கூறியதுண்டு.
எனக்கு நண்பர்கள் வட்டாரம் குறைவு. விரல்விட்டு எண்ணிவிடலாம். அந்த நட்பு வட்டாரத்தில் முக்கியமானவர் கனிமொழி அக்கா. அக்காவுக்கு கடவுள் நம்பிக்கை இல்லாதபோதும், நான் கோவிலுக்கு செல்லும்போது வழிகாட்டியாக இருப்பவர் அவர்தான். எந்த ஊருக்கு சென்றாலும் அக்காவின் மக்கள் என்னை பாதுகாப்பாக கூட்டிச்செல்வார்கள்.
கனிமொழி அக்காவை பார்க்கும் போது ரொம்ப Rough ஆக தெரிவார். ஆனால் அவர் சிரித்தால் அவ்வளவு அழகு. அவர் எப்போதும் சிரித்துக்கொண்டே இருக்க வேண்டும் என்பதே எனது ஆசை” என பகிர்ந்தார் ஐஸ்வர்யா.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ராஜலட்சுமி…
நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…
இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…
தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…
கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…
அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…
This website uses cookies.