சினிமா / TV

அந்த அரசியல் வாரிசுடன் நெருக்கம்.. நாளை தீர்ப்பு.. பரபரப்பை கிளப்பிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த்!

நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகளான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் நடிகர் தனுஷை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு யாத்ரா, லிங்கா என இரு மகன்கள் உள்ள நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக தனுஷ் – ஐஸ்வர்யா பிரிவதாக அறிவித்தனர்.

இவர்கள் விவாகரத்து வழக்கு 2 வருடமாக நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில் நாளை தீர்ப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் 20 வருடமாக அரசியல் வாரிசுடன் நெருக்கமாக இருப்பதாக ஐஸ்வர்யா ரஜினிகாந்த் கூறியுள்ளார். கலைஞர் கருணாநிதியின் மகளான கனிமொழியுடன் 20வருட நட்பு குறித்து ஐஸ்வர்யா மனம் திறந்து பேசியுள்ளார்.

கனிமொழியின் அரசியல் பயணத்தை போற்றும் விதமாக, ஒரு யூடியூப் சேனல் சிறப்பு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தது. அதில் சிறப்பு விருந்தினராக வந்திருந்த ஐஸ்வர்யா ரஜினிகாந்த், கனிமொழியுடன் தனது நீண்ட கால நட்பு பற்றிய விவரங்களை முதன்முறையாக பகிர்ந்தார்.

ஐஸ்வர்யா கூறியதாவது: “பொதுவாக நான் எந்த நிகழ்ச்சிகளுக்கும் செல்ல மாட்டேன். ஆனால், கனிமொழி அக்காவுக்காக நான் எங்கு வேண்டுமானாலும் சென்றுவிடுவேன். எங்களது நட்பு 20 ஆண்டுகளாக நீடிக்கிறது. இது வார்த்தைகளால் விவரிக்க முடியாத ஒரு உறவு.

இதையும் படியுங்க: நீயெல்லாம் Second Hand : சமந்தா மீது நெட்டிசன்கள் மோசமான விமர்சனம்..!!

நான் எப்போதும் சோர்வாக இருந்தால், முதலில் போன் செய்து பேசுவது அக்காவிடம்தான். அரசியல் மேடைகளிலும், நாடாளுமன்றத்திலும் அவர் பேசியதை பார்த்து பல முறை நான் திட்டியுள்ளேன். ‘இன்னும் நல்லா பேசனும்’ என கூறியதுண்டு.

எனக்கு நண்பர்கள் வட்டாரம் குறைவு. விரல்விட்டு எண்ணிவிடலாம். அந்த நட்பு வட்டாரத்தில் முக்கியமானவர் கனிமொழி அக்கா. அக்காவுக்கு கடவுள் நம்பிக்கை இல்லாதபோதும், நான் கோவிலுக்கு செல்லும்போது வழிகாட்டியாக இருப்பவர் அவர்தான். எந்த ஊருக்கு சென்றாலும் அக்காவின் மக்கள் என்னை பாதுகாப்பாக கூட்டிச்செல்வார்கள்.

கனிமொழி அக்காவை பார்க்கும் போது ரொம்ப Rough ஆக தெரிவார். ஆனால் அவர் சிரித்தால் அவ்வளவு அழகு. அவர் எப்போதும் சிரித்துக்கொண்டே இருக்க வேண்டும் என்பதே எனது ஆசை” என பகிர்ந்தார் ஐஸ்வர்யா.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

நித்யானந்தா இந்த நாட்டில்தான் இருக்கிறார்- நீதிமன்றத்தில் சீக்ரெட்டை போட்டுடைத்த சீடர்!

2012 ஆம் ஆண்டு நித்யானந்தா மதுரை ஆதீனத்தின் இளைய ஆதீனமாக நியமனம் செய்யப்பட்டார். இந்த நியமனத்தை எதிர்த்து ஆதீன மடத்தின்…

4 hours ago

படம் வெளியாகனும்னா இதை பண்ணிதான் ஆகணும்- ஆமிர்கானுக்கு ஆர்டர் போட்ட சென்சார் போர்டு?

ஆமிர்கான் நடிப்பில் ஆர் எஸ் பிரசன்னா இயக்கத்தில் உருவாகியுள்ள “சித்தாரேஜமீன் பர்” என்ற திரைப்படம் நாளை (ஜூன் 20) திரையரங்குகளில்…

5 hours ago

ஆங்கிலம் பேசுபவர்களே! இதை எழுதி வச்சிக்கோங்க- சவால் விட்ட அமித்ஷா!

டில்லியில் நடந்த ஒரு புத்தக திருவிழாவில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியுள்ளது தற்போது இணையத்தில் விவாதங்களை கிளப்பியுள்ளது. அவ்விழாவில்…

6 hours ago

தக் லைஃப் படத்துக்கு முட்டுக்கட்டை போட்டால் கிரிமினல் வழக்கு?- உச்சநீதிமன்றம் அதிரடி

தக் லைஃப் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய கமல்ஹாசன், தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது என கூறியது சர்ச்சையை…

6 hours ago

குபேரா படத்தில் இத்தனை வெட்டுக்களா? படத்தில் அப்படி என்னதான் பிரச்சனை!

சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலரது நடிப்பில் நாளை ஜூன் 20 உலகம் முழுவதும்…

7 hours ago

24 மணிநேரமும் டாஸ்மாக், நீ குடிச்சே செத்துப்போ- திமுக முன்னாள் எம்எல்ஏ  சர்ச்சை பேச்சு…

“எனக்கு மட்டும் அதிகாரம் இருந்தால் 24 மணிநேரமும் டாஸ்மாக்கை திறந்து வைப்பேன்” என ஒரு மேடையில் பேசியுள்ளார் திமுக முன்னாள்…

7 hours ago

This website uses cookies.