கேரளாவில் இருந்து தமிழ் சினிமாவிற்கு இறக்குமதி செயய்யப்பட்ட நடிகைகளில் ஒருவரான அமலா பால் தமிழ் சினிமாவில் சர்ச்சைக்குரிய நடிகையாக விமர்சிக்கப்பட்டு அறிமுகம் ஆனார். அமலா பால் 2009 இல் நீலதாமரா என்ற மலையாள படத்தின் மூலம் தனது திரை வாழ்க்கையை ஆரம்பித்தார்.
அதன் பிறகு . தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்த அவர் 2010 ஆம் ஆண்டு தமிழ் படமான சிந்து சமவெளியில் நடித்து விமர்சிக்கப்பட்டார். மாமனாருடன் கள்ளத்தொடர்பு வைத்திருக்கும் சர்ச்சைக்குரிய அந்த கதாபாத்திரத்தில் நடித்து முகம் சுளிக்க வைத்தார்.
அதன் பின்னர் கதை தேர்வில் கவனம் செலுத்தி நடித்து வந்த அவர், தொடர்ந்து மைனா, தெய்வத் திருமகள், வேட்டை , காதலில் சொதப்புவது எப்படி , தலைவா உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். தெய்வ திருமகள் படத்தின் படப்பிடிப்பில் அமலா பால் இயக்குனர் ஏ.எல்.விஜய்யுடன் டேட்டிங் செய்யத் தொடங்கினார். 2014 ஆம் ஆண்டில், அவர்கள் திருமணம் செய்துக்கொண்டனர். ஆனால், திருமணமான இரண்டு ஆண்டுகளில் அவர்கள் விவாகரத்து பெற்றுவிட்டனர்.
காரணம் அமலா பால் நடிகர் தனுஷுடன் வேலையில்லா பட்டதாரி படத்தில் நடித்தபோது வீட்டிற்கே போகாமல் அப்பாட்மென்டில் லூட்டியடித்தாக அந்த ரகசிய உறவு கொடுத்த வலியால் ஏஎல் விஜய் விவாகரத்து செய்துவிட்டதாக அன்றைய செய்திகள் வெளியானது. இந்நிலையில் தற்போது இதுவரை வெளிவராதக விஷயத்தை பிரபல பத்திரிகையாளர் செய்யாறு பாலு கூறியுள்ளார்.
அதாவது, அமலா பால் திருமணம் செய்துக்கொள்வதில் அவரது அம்மாவுக்கு கொஞ்சம் கூட விருப்பமே இல்லையாம். காரணம் குடும்பத்திற்கு கோடி கணக்கில் பணம் சம்பாதித்து கொடுத்த அவர் வேறு வேறு நபரை திருமணம் செய்துக்கொண்டால் பணத்தை எதிர்பார்க்க முடியாது என திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தாராம்.
இதே போல் ஏஎல் விஜய் வீட்டிலும் ஒரு நடிகையை திருமணம் செய்துவைக்க அவரது பெற்றோரும் விரும்பவில்லையாம். ஒரு கட்டத்தில் இருவரும் விவாகரத்து என்றதும் அமலா பாலின் அம்மா கேரளாவில் இருந்து ஓடோடி வந்து அவரை விட்டால் போதும் என அழைத்துக்கொண்டு சென்றுவிட்டராம். என்ன தான் இருந்தாலும் மகளின் வாழ்க்கை போனாலும் போகட்டும் பணம் தான் முக்கியம் என்று இருந்துள்ள அமலா பாலின் அம்மா மிக மோசமானவர் அவரால் தான் அமலா பால் இப்படி கெட்டுப்போய்விட்டார் போல என ரசிகர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
காதல் திருமணம் செய்த ஜோடியை பிரிக்கும் நோக்கில் காதலனின் தம்பி என கூறப்படும் சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில் புரட்சி பாரதம்…
நேற்று பெரம்பூரில் பத்து வயது மாணவி சௌம்யா தனது தாயாருடன் ஸ்கூட்டரில் அமர்ந்துகொண்டு சென்றுகொண்டிருந்தார். அப்போது அந்த ஸ்கூட்டருக்கு பின்னால்…
சென்னை ராமாபுரத்தில் மெட்ரோ ரயில் மேம்பாலம் கட்டுமானப் பணி நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இந்த நிலையில் கடந்த ஜூன் 12 ஆம் தேதி…
“தக் லைஃப்” திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது என்று கமல்ஹாசன் கூறிய நிலையில் அவர்…
திருப்பூரைச் சேர்ந்த தமிழர் ஒருவர் கத்திகுத்தால் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தின் திருப்பூர் மாவட்டத்தின் படியூர் பகுதியைச்…
தொடர்ந்து தோல்வி படங்கள்? கோலிவுட்டின் முன்னணி நடிகராக சீயான் விக்ரம் வலம் வந்தாலும் “தெய்வத்திருமகள்” திரைப்படத்திற்குப் பிறகு சொல்லிக்கொள்வது போல்…
This website uses cookies.