அர்ச்சனாவுக்கு அதிகரிக்கும் ஓட்டு.. பொறாமையில் வனிதா மகள் செய்த சகுனி வேலை..!

இந்திய தொலைக்காட்சிகளில் பல மொழிகளில் பரவலாக ஒளிபரப்பப்படும் நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக்பாஸ் ரியாலிட்டி ஷோ தமிழில் இதுவரை 6 சீசன்கள் முடிந்துள்ளது கமல் ஹாசன் தொகுத்து வழங்கி வரும் இந்நிகழ்ச்சிக்கு பெருவாரியான ரசிகர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது, அடுத்த சீசனாக பிக்பாஸ் 7 நிகழ்ச்சி துவங்கி உள்ளது.

இந்த சீசனில் தான் முதல்முறையாக பிக் பாஸ், ஸ்மால் பாஸ் என இரண்டு வீடுகள் இடம்பெற்றுள்ள நிலையில், இரண்டாவது வீடு சிறைச்சாலை போன்ற விதிகளுடன் இயங்க தொடங்கியுள்ளது.

இந்தநிலையில், பிக் பாஸ் சீசன் 7 ல் கடந்த 80 நாட்களை தாண்டி வெற்றி கரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. ஆனால், இதுவரை இந்த சீசனில் யார் டைட்டிலை வெல்வார் என்ற கணிப்பு ரசிகர்களால் யூகிக்க முடியவில்லை. காரணம் ஒருவரின் ஆட்டமும் ரசிகர்களை கவர்ந்தது போல் இல்லை என்பதுதான். இந்தநிலையில், இந்த வாரம் எலிமினேஷன் யாரென்ற விவரம் சமூக வலைதளங்களில் வலம் வந்து கொண்டிருக்கிறது.

தற்போது, இவர்கள் ஆறு பேரில் யார் டைட்டிலை ஜெயிப்பார்கள் என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுந்து வருகிறது. வாக்குகள் அடிப்படையில், தான் வெற்றியாளர் யார் என்பது உறுதியாகும். அர்ச்சனாவுக்கு தான் ஆதரவு அதிகமாக இருந்து வருகிறது. அவருக்கு தான் டைட்டில் கிடைக்கும் என ஒரு கருத்து நிலவுகிறது. இந்த நேரத்தில், ஆறு போட்டியாளர்கள் வீட்டில் இருக்கும் நிலையில், பைனலில் வரும் வெறும் 4 போட்டியாளர் தான் வருவார்களாம். இரண்டு பேரை வாரத்தின் இடையிலே Mid Week எவிக்‌ஷன் செய்ய இருந்த நிலையில், இரண்டாம் முறையாக, விஜய் வருமா பிக் பாஸ் வீட்டை விட்டு Mid Week எவிக்‌ஷனில் வெளியேறி இருக்கிறார்.

விஷ்ணு இறுதி போட்டிக்கு தேர்வாகி விட்ட நிலையில், அடுத்து அர்ச்சனா மற்றும் மாயாவிற்கு அதிக வாக்குகள் பதிவாகி வருகிறது. இவர்களை தொடந்து, தினேஷ் மற்றும் மணி தான் உள்ளனர், இவர்களில் ஒருவர் தான் வெளியேறுவார் என கூறப்படுகிறது.

அர்ச்சனா மற்றும் மாயா இடையே, டைட்டிலை வெல்லப் போட்டி இருந்துதான் வந்து கொண்டிருக்கிறது. அர்ச்சனா மற்றும் மாயா இருவரும் ஆரம்பத்தில் இருந்தே மோதிக் கொண்டிருந்தாலும், பூர்ணிமா வெளியேறிய பிறகு இருவரும் சமரசம் ஆகி ஒன்றாக தான் இருந்து வந்தனர்.

இந்நிலையில், கடைசி வாரத்தில் பழைய போட்டியாளர்கள் மொத்த பேரும் வீட்டிற்குள் மீண்டும் வந்திருக்கின்றனர். அப்போது, ஜோதிகா மாயாவிடம் பேசி மாயாவை தூண்டிவிட்டு மீண்டும் அர்ச்சனாவை பற்றி தவறாக பேசி சண்டை போட வைத்துள்ளார்.

இந்த சம்பவத்தால் அர்ச்சனாவுக்கு தான் இப்போது அதிக ஓட்டுகள் வர தொடங்கி இருக்கிறது. பொறாமையின் உச்சத்தில் வனிதாவின் மகள் ஜோவிகா செய்த சகுனி வேலையை நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

Poorni

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

2 weeks ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.