விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து சீரியல் தொடர்களுமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வரிசையில், இல்லத்தரசிகள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று டிஆர்பியில் டாப் மூன்று இடத்திற்குள் எப்போதும் இடம் பிடித்து வரும் தொடர் ‘பாக்கியலட்சுமி’.
குடும்ப பெண்கள் நினைத்தால் எதையும் சாதிக்க முடியும் என்கிற பாசிட்டிவான கண்ணோட்டத்தோடு ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியல், மற்ற சீரியல்களுக்கு டஃப் கொடுத்து வருகிறது. பாக்கியா கதாபாத்திரத்தில் நடிகை சுசித்ரா நடித்து வருகிறார். இதற்கு இணையான கதாபாத்திரமான ராதிகா என்னும் முக்கிய கதாபாத்திரத்தில், ரேஷ்மா பசுபுலேட்டி நடித்து வருகிறார்.
ஆரம்பத்தில், அப்பாவியாக இருந்த இந்த கதாபாத்திரம் தற்போது சில வில்லத்தனத்தோடு இருப்பது போல ராதிகா கதாபாத்திரம் காட்டப்பட்டு வருகிறது. இதனிடையே, பாக்கியலட்சுமி சீரியலில் சமீபத்தில் நடிகர் ரஞ்சித் புதியதாக என்ட்ரி கொடுத்தார்.
கோபி குடிப்பழக்கத்தால் அனைவரையும் கஷ்டப்படுத்தி வர இப்போது ராதிகா பாக்கியா வீட்டிற்குள் சென்று அவரை வெளியே செல்ல சொல்கிறார். அடுத்தடுத்து என்ன நடக்கப்போகிறது என்பதை காண மக்களும் ஆர்வமாக உள்ளார்கள்.
இந்நிலையில், இந்த தொடரின் மூலம் மக்களிடம் நன்கு பிரபலமான கோபி கதாபாத்திரத்தில் நடிக்கும் சதீஸ்க்கு மக்களிடம் நல்ல பெயர் உள்ளது.
இதனிடையே, பாக்கியலட்சுமி சீரியலில் இருந்து தான் சில எபிசோட்டிற்கு பின் விலகியுள்ளதாக கோபி கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகர் சதீஷ் தெரிவித்துள்ளது அனைவரிடத்திலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பாக்கியலட்சுமி சீரியல் இந்த அளவிற்கு பிரபலமாக முக்கிய காரணமாக இந்த கதாபாத்திரம் கோபி தான்.
தற்போது நடிகர் சதீஷ் வெளியிட்ட வீடியோவில், தனிப்பட்ட காரணத்திற்காக இனிமேல் கோபியாக தன்னால் நடிக்க முடியாது என்று கண்ணீர் விட்டபடி எமோஷ்னலாக தெரிவித்து இருக்கிறார் சதீஷ். இதுகுறித்து, இணையத்தில் அவர் வெளியிட்ட அந்த வீடியோவை பார்த்து ரசிகர்கள் வேண்டாம் என்று கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
இதனிடையே, சீரியலில் ரசிகர்களால் கொண்டாடப்பட்டவர் கோபி கதாபாத்திரத்தில் நடிக்கும் சதீஷ். இவர் யாரும் எதிர்ப்பார்க்காத வண்ணம் சில காரணங்களால் தொடரில் இருந்து விலகிவிட்டார் என்று கூறப்பட்டது.
இதனிடையே, சீரியல் குறித்து எப்போதும் சின்ன சின்ன ஹின்ட் கொடுக்கும் கோபி என்கிற சதீஷ் தற்போது இன்ஸ்டாவில் ஒரு போட்டோ பதிவிட்டுள்ளார். அதில் அவர் வயதான தோற்றத்தில் உள்ளார், மேலும் இதுதான் வயதான கோபி என பதிவிட்டு உள்ளார்.
எனவே பாக்கியலட்சுமி முதல் பாகம் முடிவடைந்து 2 வது பாகம் வரப்போகிறதோ, அதில் சதீஷ் வயதான தோற்றத்தில் நடிக்கிறாரோ என ரசிகர்கள் குழம்பி வருகிறார்கள்.
ஆமிர்கான் நடிப்பில் ஆர் எஸ் பிரசன்னா இயக்கத்தில் உருவாகியுள்ள “சித்தாரேஜமீன் பர்” என்ற திரைப்படம் நாளை (ஜூன் 20) திரையரங்குகளில்…
டில்லியில் நடந்த ஒரு புத்தக திருவிழாவில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியுள்ளது தற்போது இணையத்தில் விவாதங்களை கிளப்பியுள்ளது. அவ்விழாவில்…
தக் லைஃப் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய கமல்ஹாசன், தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது என கூறியது சர்ச்சையை…
சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலரது நடிப்பில் நாளை ஜூன் 20 உலகம் முழுவதும்…
“எனக்கு மட்டும் அதிகாரம் இருந்தால் 24 மணிநேரமும் டாஸ்மாக்கை திறந்து வைப்பேன்” என ஒரு மேடையில் பேசியுள்ளார் திமுக முன்னாள்…
காதல் திருமணம் செய்த ஜோடியை பிரிக்கும் நோக்கில் காதலனின் தம்பி என கூறப்படும் சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில் புரட்சி பாரதம்…
This website uses cookies.