தமிழ் சினிமாவின் நட்சத்திர தம்பதியாக வலம் வந்தவர்கள் தான் தனுஷ்- ஐஸ்வர்யா, இவர்கள் கடந்த மாதம் பிரிய போவதாக அறிவித்து அதிர்ச்சியை ஏற்படுத்தினர். இதன் மூலம் அவர்களது 18 வருட திருமண வாழ்க்கை முறிந்தது. அதைத் தொடர்ந்து இருவரும் அவரவர் வேலைகளில் கவனம் செலுத்த தொடங்கினர்.
இதனிடையே, நடிகர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கிய ‘பயணி’ ஆல்பத்திற்கு நடிகர் தனுஷ் தனது ட்டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்து இருந்தார். அதற்கு ஐஸ்வர்யா ரஜினிகாந்தும் நன்றி தெரிவித்தார். இதனால் இருவரும் சேர்ந்து விடுவார்கள் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது.
ஆனால், டுவிட்டர், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் தனது பெயருக்கு பின்னால் இருந்த நடிகர் தனுஷின் பெயரை நீக்கினர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் . இந்த செயல் தனுஷ், ரஜினி ரசிகர்களை மட்டுமின்றி, இருவரும் சேர வேண்டும் என விரும்பி திரைத்துறையினரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இதனால் இருவரும் மீண்டும் இணைவதற்கு சாத்தியமே இல்ல என்றே தெரிகிறது.
இதனிடையே, தனுஷ் சமீபத்தில் தன் பிள்ளைகளுடன் இளையராஜாவின் இசை நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பேரன்களிடம் ரஜினி அது பற்றி விசாரித்துள்ளார். அதற்கு அவர்கள் அப்பாவுடன் இருப்பது தான் பிடித்திருக்கிறது கூறியதாகவும், இதனால் அதிர்ந்து போன ரஜினி தன் மனைவியிடம் ஐஸ்வர்யா குறித்து கோபமாக பேசி இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இதனிடையே, தன் மகள் வாழ்க்கையை கெடுத்த தனுஷ் சும்மா விட மாட்டேன் என்று லதா ரஜினிகாந்த் முடிவெடுத்து, தனக்கு தெரிந்த தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குனர்களிடம் தனுஷை வைத்து படம் எதுவும் செய்ய வேண்டாம் என்று கேட்டுக்கொண்டதாக தகவல் வெளியானது. இதனால் தான் தனுஷுக்கும் தற்போது புதிய படங்களுக்கான வாய்ப்புகள் எதுவும் வரவில்லை என்று கூறப்படுகிறது.
இந்நிலையில், இதுதொடர்பாக ரஜினி குடும்பத்தினரிடம் பேசியுள்ளாராம் தனுஷ். இனிமேலும் நீங்கள் என் வழியில் குறுக்கிட்டால் பிரஸ்மீட் வைத்து அனைத்து விஷயங்களையும் போட்டு உடைத்து விடுவேன் என்றும், நான் வெளியில் சொன்னால், உங்கள் குடும்ப மானம்தான் போகும் என்றும் தனுஷ் பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது. தனுஷ் இப்படி பேசியதால் ரஜினி குடும்பத்தார் வாயடைத்து போயுள்ளனராம். தனுஷ் பிரஸ் மீட் வைக்கப்போவதாக கூறிய இந்த தகவல்தான் சினிமா வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
யுவன் ஷங்கர் ராஜா இளையராஜாவின் இளைய மகனான யுவன் ஷங்கர் ராஜா, “அரவிந்தன்” திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர். தனது…
சென்னையில் நிருபர்கள் சந்திப்பில் பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் ஆலோசித்தது குறித்து பேசினார். நடுத்தர…
லோகி யுனிவர்ஸ் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் Lokesh Cinematic Universe என்ற ஒன்றை உருவாக்கி கோலிவுட்டில் ஒரு புதிய வரலாற்றையே…
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி முருகன் கோயில் மாட வீதியில் வேல் அமைந்துள்ள பகுதியில் காலை பக்தர்கள் தரிசனம் செய்து கொண்டிருந்தனர்.…
கனிமா… தமிழ் சினிமா இசை உலகில் மிகவும் தனித்துவமான இசையமைப்பாளராக இயங்கி வருபவர் சந்தோஷ் நாராயணன். தமிழ் சினிமா இசை…
விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை துவங்கி அரசியல் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறார். அடுத்த வரும் தமிழக…
This website uses cookies.